காற்றுக்கில்லை கறுப்பு வெள்ளை….

அமெரிக்காவில் நிறவெறியால் நடந்த படுகொலைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக கவிஞர் வைரமுத்து பாடல் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அமெரிக்காவில் மின்னியாபொலிஸ் நகரில் கறுப்பு இனத்தை சேர்ந்த ஜார்ஜ் பிளாய்டு என்பவர் வெள்ளை இன போலீஸ் அதிகாரிகள் பிடியில் கடந்த மாதம் 25-ம் தேதி கொல்லப்பட்ட சம்பவம் அங்கு கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்திற்கு நீதி கேட்டு அமெரிக்காவின் பல்வேறு நகரங்களில் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. நிறவெறியால் நடந்த இந்த படுகொலைக்கு எதிராக இந்திய திரைப்பிரபலங்களும் குரல் கொடுத்து வருகின்றனர்.

அந்த வகையில் கவிஞர் வைரமுத்து நிறவெறிக்கு எதிராக பாடல் ஒன்றை எழுதி உள்ளார். இந்த பாடலுக்கு ரமேஷ் தமிழ்மணி என்பவர் இசையமைத்துள்ளார்.

பாடலில் வைரமுத்து எழுதியுள்ள வரிகள் பின்வருமாறு: “காற்றுக்கில்லை கறுப்பு வெள்ளை என்னால் மூச்சு விட முடியவில்லை. என் காற்றின் கழுத்தில் யார் கால் வைத்து அழுத்துவது, சுவாசக்குழாயில் யார் சுவர் ஒன்றை எழுப்புவது, காற்றுக்கில்லை கறுப்பு வெள்ளைஎன்னால் மூச்சுவிட முடியவில்லை.

 https://www.youtube.com/watch?v=TIUkCI9F1CE&feature=emb_logo