திரைமுரசு

ரஜினியின் 2.0 படத்தின் கதை!

ஷங்கர் இயக்கத்தில் ரஜினிகாந்த் – அக்‌ஷய் குமார் – ஏமி ஜாக்சன் நடிப்பில் உருவாகி வரும் 2.0 படத்தின் கதை சினிமா வட்டாரங்களில் வைரலாக பரவி வருகிறது. உலகமே எதிர்பார்த்துக் காத்துக்கொண்டிருக்கும் 2.0 படத்தின் வெளியீடு தள்ளிப்போயிருக்கிறது. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், பிரம்மாண்ட இயக்குநர் ‌ஷங்கர், இந்தி நடிகர் அக்‌‌ஷய் குமார், ஏ.ஆர்.ரகுமான், லைகா என்று ஜாம்பவான்கள் இணைந்திருக்கும் 2.0 படத்தின் கிராபிக்ஸ் வேலைகளில் தான் சிக்கல் எழுந்துள்ளது. ‌ஷங்கர் முதலில் கொடுத்த நிறுவனம் செய்து காண்பித்த கிராபிக்ஸ் வேலைகளில் ‌ஷங்கருக்கு திருப்தி இல்லை ...

Read More »

திகிலான திருப்பங்கள் நிறைந்த கண்மணி பாப்பா!

வனஷாக்ஷி கிரியேசன்ஸ் பெருமையுடன் வழங்க, தமன்குமார், மியாஸ்ரீ நடிப்பில் உருவாகி இருக்கும் ‘கண்மணி பாப்பா’ திரைப்படம் திகிலான திருப்பங்களுடன் உருவாக்கி இருக்கிறார்கள். நேரெதிர் எண்ணம் கொண்ட கணவன் – மனைவி மற்றும் அவர்களது செல்ல மகள் இவர்களைச் சுற்றி நடக்கும் எதிர்பாராத சம்பவங்களின் தொகுப்பு தான் ‘கண்மணி பாப்பா’ திரைப்படம். கட்டுமானத் தொழில் செய்து கொண்டிருக்கும் கதாநாயகனுக்கு, எதிர்பார்த்ததைப் போல் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை. அதே சமயத்தில் கையிருப்பும் கரைந்து போவதால், எதிர்மறை எண்ணம் தலைதூக்கத் துவண்டு போகிறார். அவரது மனைவி தான் அவருக்கு ...

Read More »

சினிமா படமாகும் நடிகை சவுந்தர்யாவின் வாழ்க்கை!

தமிழ், தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் முன்னணி நடியாக வலம் வந்த நடிகை சவுந்தர்யாவின் வாழ்க்கையை படமாக எடுக்க இருப்பதாக பிரபல தயாரிப்பாளர் ஒருவர் அறிவித்துள்ளார். தமிழ், தெலுங்கு பட உலகை ஒரு காலத்தில் கலக்கிய நடிகை சவுந்தர்யாவின் வாழ்க்கை சினிமா படமாக உருவாக இருக்கிறது. பெங்களூருவை சேர்ந்த சவுந்தர்யா எம்.பி.பி.எஸ். படிப்பை பாதியில் நிறுத்திவிட்டு சினிமாவுக்கு வந்தார். 1993-ல் கார்த்திக்கின் பொன்னுமணி படத்தில் அறிமுகமானார். ரஜினிகாந்த் ஜோடியாக அருணாசலம், படையப்பா படங்களில் நடித்து முன்னணி கதாநாயகியாக உயர்ந்தார். கமல்ஹாசனுடன் காதலா காதலா படத்திலும், ...

Read More »

150 கதைகளை நிராகரித்த அதிதி பாலன்!

அருவி படத்தில் நடித்து பிரபலமான நடிகை அதிதி பாலன் 150-க்கும் மேற்பட்ட கதைகளை வேண்டாம் என்று நிராகரித்துள்ளாராம். கிடைத்த நல்ல பெயரை காப்பாற்றிக் கொள்ள வேண்டும் என்கிறாராம். கடந்த ஆண்டு இறுதியில் வெளியான அருவி படம் மூலம் நாயகியாக அறிமுகமானவர் அதிதி பாலன். எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்படும் பெண்ணாக நடித்து அசத்தியிருந்தார். படத்துக்கு, முக்கியமாக அதிதியின் நடிப்புக்கு பாராட்டுகளும் விருதுகளும் கிடைத்தன. அந்த படம் வெளியாகி ஆறு மாதங்கள் ஆகியும் அடுத்து படம் எதையும் ஒப்புக்கொள்ளவில்லை. விசாரித்தால் அவர் இந்த ஆறு மாதங்களில் சுமார் ...

Read More »

பிக்பாஸ் 2 – பட்டியலில் இடம்பிடித்துள்ள பிரபலங்கள்!

பிரபல தனியார் தொலைக்காட்சி நடத்தும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் இரண்டாவது சீசனில் யார், யார் பெயர் பட்டியலில் உள்ளது என்பது குறித்த தகவல் வெளியாகி இருக்கிறது. கடந்த ஆண்டு பரபரப்புக்குள்ளாகி தமிழ்நாட்டு மக்களின் கவனத்தை ஈர்த்த பிக்பாஸ் நிகழ்ச்சியின் அடுத்த பாகம் விரைவில் ஒளிபரப்பாக இருக்கிறது. கடந்த முறை போலவே இந்த முறையும் கமலே தொகுத்து வழங்குகிறார். இந்த நிகழ்ச்சியின் டீசரை நடிகர் கமல் கடந்த சனிக்கிழமை வெளியிட்டார். இதில் கலந்துகொள்ள பிரபலங்களிடம் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. அந்த பிரபலங்கள் பட்டியலில் இனியா, ராய்லக்ஷ்மி, லட்சுமி ...

Read More »

ஸ்ரீதேவி மரணத்தில் சந்தேகம் இல்லை!

ஸ்ரீதேவி மரணம் குறித்து விசாரணை செய்ய கோரி தாக்கல் செய்யப்பட்ட பொதுநல மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. பிரபல நடிகை ஸ்ரீதேவி கடந்த பிப்ரவரி மாதம் துபாய் சென்றிருந்தபோது அவர் தங்கியிருந்த ஓட்டல் அறையின் குளியல் தொட்டியில் மூழ்கி இறந்துவிட்டார். அவரது மரணத்தில் சந்தேகம் இருப்பதாக பல்வேறு தகவல் பரவியதையடுத்து, துபாய் போலீசார் விசாரணை நடத்தி, அதன்பின்னர் உடலை ஒப்படைத்தனர். ஆனால் நடிகை ஸ்ரீதேவி மரணத்தில் சந்தேகம் இருப்பதாகவும், அவரது மரணம் குறித்து விரிவான விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் இயக்குனர் சுனில் ...

Read More »

சூப்பர் சிங்கர் பிரகதி கரம் பற்றப்போகும் தென்னிந்திய நடிகர்!

தமிழ்நாட்டில் பிரபலமான தனியார் தொலைக்காட்சியான விஜய் டிவி நடாத்திய சூப்பர் சிங்கர் போட்டியில் கலந்து கொண்ட அமெரிக்காவை சேர்ந்த இந்திய பெண்ணான பிரகதி தற்போது மிகவும் பிரபலமாகி வருகிறார். இசை நிகழ்ச்சிகள், இசை ஆல்பம்கள், மற்றும் பின்னணி பாடகி என நிறைய பணிகளுடன் உள்ளார். இவர் தென்னிந்திய நடிகர் அசோக் செல்வனை காதலித்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இருவரும் தங்களது சேர்ந்து எடுத்த புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் பதிவேற்றிவருகிறார்களாம். அசோக்செல்வன் தமிழில் தெகிடி என்ற படத்தில் நடித்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.  

Read More »

தமிழக தற்கொலைகளைப் பிரதிபலிக்கும் திட்டி வாசல்!

தமிழகத்தில் தற்போது நடைபெற்று வரும் தற்கொலைகளைப் பிரதிபலிக்கும் படமாக திட்டி வாசல் உருவாகி இருப்பதாக படக்குழுவினர் தெரிவித்துள்ளனர். சமூகத்துக்கு எதிரான கோபமே தற்கொலை என்பது அண்மையில் நடந்து வரும் தற்கொலைகள். தொடர் தீக்குளிப்புகள் தமிழகத்தில் அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகின்றன. ஆனால் பாதிப்புக்குள்ளானவர்கள் என்ன செய்வது,? சராசரி மனிதர்கள் நீதியை தேடி காவல்துறை வருகின்றனர். அங்கு அவர்களுக்குண்டான நீதியும் குறைந்தபட்ச மரியாதையும் கிடைப்பதில்லை. பிறகு வேறு வழியின்றி கலெக்டர் அலுவலகம் சென்று மனு தருகின்றனர். எந்தவித நடவடிக்கையுமில்லை என்பதால் மக்களும்  பலமுறை மனு தந்து கொண்டே ...

Read More »

மூன்று மாதம் போராடி தணிக்கை வாங்கிய உறுதிகொள் இயக்குனர்

உறுதிகொள் என்ற படத்தை இயக்கியுள்ள இயக்குனர் அய்யனார், இந்தப் படத்திற்கு மூன்று மாதம் போராடி தணிக்கை (சென்சார்) வாங்கியதாக கூறியிருக்கிறார். .பி.கே.பிலிம்ஸ் மற்றும் ஜெய் சிநேகம் பிலிம்ஸ் இணைந்து தயாரித்துள்ள உறுதிகொள் திரைப்படம் அக்டோபர் 6 அன்று திரைக்கு வரவிருந்தது. ஜி.எஸ்.டி பிரச்சனையால் புதிய படம் வெளியிடக் கூடாது என்ற முடிவால் வெளிவரவில்லை. நவம்பர் 3 அன்று திரையிட்டுக் கொள்ளலாம் என்ற தயாரிப்பாளர் சங்கத்தின் முடிவை ஏற்று திரைக்கு வருகிறது. இது குறித்து படத்தின் இயக்குனர் அய்யனார் கூறும்போது, ‘சிறிய பட தயாரிப்பு நிறுவனங்களுக்கு ...

Read More »

சூர்யாவின் சொடக்கு-க்கு கிடைத்த வரவேற்பு

சூர்யா நடிப்பில் உருவாகி இருக்கும் ‘தானா சேர்ந்த கூட்டம்’ படத்தில் இடம்பெற்ற ‘சொடக்கு..’ பாடல் இரண்டு நாட்களில் அதிக பார்வையாளர்கள் பார்த்து சாதனை படைத்துள்ளது. சூர்யா நடிப்பில் இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் படம் ‘தானா சேர்ந்த கூட்டம்’. ஸ்டுடியோ கிரீன் தயாரிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் இப்படத்தில் சூர்யாவிற்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடித்துள்ளார். அனிருத் இசையமைத்துள்ளார். அனிருத் இசையில் ‘சொடக்கு…’ என்ற பாடல் இடம்பெற்றுள்ளது. சொடக்கு பாடல் டீசர் சில நாட்களுக்கு முன்பு வெளியாகி அனைவரிடமும் நல்ல வரவேற்பை ...

Read More »