திரைமுரசு

ஊரடங்கை பயன்படுத்தி 87 ஆபாச படங்களை தயாரித்த நடிகை கைது

மும்பையில் ஊரடங்கை பயன்படுத்தி 87 ஆபாச படங்களை தயாரித்த மாடல் அழகியும் நடிகையுமான கெஹானா வசிஸ்த் கைது செய்யப்பட்டார். மும்பையில்  ஆபாச படம் எடுத்த  தொலைக்காட்சி நடிகை உள்பட 8 பேரை போலீசார் கைது செய்தனர். குறும்படங்கள் தயாரிப்பதாக கூறி மும்பை மற்றும் அதைச் சுற்றியுள்ள பங்களாக்களில் ஆபாச  திரைப்படங்களை உருவாக்கி வந்து உள்ளனர். நடிகை கெஹானா வசிஸ்த் ஒரு தயாரிப்பு நிறுவனத்தைத் தொடங்கி ஆபாச வீடியோக்களை தயாரித்து உள்ளார். ஓடிடி தளங்களில் இந்த ஆபாச விடியோக்களை பதிவேற்றப்படுவது தொடர்பாக உமேஷ் காமத் என்ற ...

Read More »

சூர்யா – ஜோதிகாவுக்காக ஸ்கிரிப்ட் ரெடி பண்ணும் பிரபல பெண் இயக்குனர்

நட்சத்திர தம்பதிகளான சூர்யா – ஜோதிகாவும் மீண்டும் இணைந்து நடிக்க உள்ளதாகவும், பிரபல பெண் இயக்குனர் அதற்கான ஸ்கிரிப்ட் எழுதி வருகிறாராம். நட்சத்திர தம்பதிகளான சூர்யா – ஜோதிகா கடைசியாக இணைந்து நடித்த படம் ‘சில்லுனு ஒரு காதல்’. கடந்த 2006ஆம் ஆண்டு வெளிவந்த இந்தத் திரைப்படம் ஒரு மிகச்சிறந்த ரொமான்ஸ் படமாக ரசிகர்களால் ரசிக்கப்பட்டது. இதன்பின்னர் அவர்கள் இருவரும் திருமணம் செய்துகொண்டனர். திருமணத்துக்கு பின் ஜோதிகா நடிக்கும் படங்களை தயாரித்துள்ள சூர்யா, அவருடன் இணைந்து நடிக்கவில்லை. இந்நிலையில், சூர்யாவும், ஜோதிகாவும் இணைந்து நடிப்பதற்கான ...

Read More »

கொரோனா பாதிப்பு ஏற்பட்டு சிகிச்சை பெற்று நலமுடன் இருக்கிறேன்

நடிகர் சூர்யா, தனக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டதாகவும், சிகிச்சை பெற்று நலமுடன் இருக்கிறேன் எனவும் தெரிவித்துள்ளார். நடிகர் சூர்யா டுவிட்டர் பக்கத்தில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். அதில் ‘‘’கொரோனா  பாதிப்பு ஏற்பட்டு, சிகிச்சை பெற்று நலமுடன் இருக்கிறேன். வாழ்க்கை இன்னும் இயல்பு நிலைக்கு திரும்பவில்லை என்பதை அனைவரும்  உணர்வோம். அச்சத்துடன் முடங்கிவிட முடியாது. அதேநேரம் பாதுகாப்பும், கவனமும் அவசியம். அர்ப்பணிப்புடன் துணைநிற்கும் மருத்துவர்களுக்கு அன்பும், நன்றிகளும்.’’ எனத் தெரிவித்துள்ளார்.

Read More »

தாத்தாவாக நடிக்கும் நெப்போலியன்

நடிகர் நெப்போலியன் அடுத்ததாக நடிக்கும் புதிய படத்தில், பிரபல நடிகருக்கு தாத்தாவாக நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. இசை அமைப்பாளர், நடிகர், இயக்குனர் என பன்முகத்திறமை கொண்டவர் ஹிப்ஹாப் ஆதி. இவர் தற்போது நடிப்பில் கவனம் செலுத்தி வருகிறார். அந்த வகையில் இவர் அடுத்ததாக நடிக்கும் படம் அன்பறிவு. இப்படத்தை அஸ்வின் ராம் இயக்குகிறார். ஹீரோயினாக காஷ்மிரா பர்தேசி நடிக்கிறார். அஜித்தின் விவேகம், விஸ்வாசம் போன்ற படங்களை தயாரித்த சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் இப்படத்தை தயாரிக்கிறது. இப்படத்தில் நடிகர் நெப்போலியன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். அவரது கதாபாத்திரம் ...

Read More »

கவின் படத்தில் சின்னத்திரை பிரபலம்

பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பல ரசிகர்களை பெற்ற கவின் நடித்துவரும் புதிய படத்தில் சின்னத்திரை பிரபலம் ஒருவர் இணைந்து நடித்து வருகிறார். சரவணன் மீனாட்சி சீரியல் மூலம் ரசிகர்களிடம் பிரபலமானவர் கவின். இதன்பின் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ஏராளமான ரசிகர்களை பெற்றார். கவின் நடிப்பில் தற்போது லிப்ட் என்னும் திரைப்படம் உருவாகி வருகிறது. இதில் இவருக்கு ஜோடியாக பிகில் பட நடிகை அம்ரிதா ஐயர் நடித்து வருகிறார். இந்நிலையில் இந்த படத்தில் குக் வித் கோமாளி நிகழ்ச்சி மூலம் பிரபலமாகி இருக்கும் ...

Read More »

திரைப்பட விழாவில் கலந்துக் கொண்ட விக்னேஷ் சிவன், நயன்தாரா…

திரைப்பட விழாவில் இயக்குனர் விக்னேஷ் சிவனும், நடிகை நயன்தாராவும் இணைந்து கலந்துக் கொண்ட புகைப்படங்கள் வெளியாகி வைரலாகி வருகிறது. இயக்குனர் விக்னேஷ் சிவன் மற்றும் நடிகை நயன்தாரா இருவரும் கடந்த சில வருடங்களாக காதலித்து வருகின்றனர். இவர்களது திருமணம் விரைவில் நடக்க இருப்பதாக கூறப்படுகிறது. இவர்கள் இருவரும் இணைந்து ரவுடி பிக்சர்ஸ் என்ற தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கி, சில திரைப்படங்களை தயாரித்தும் வெளியிட்டும் வருகிறார்கள். அந்த வகையில் நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் கூழாங்கல் என்ற திரைப்படத்தின் உரிமையை சமீபத்தில் கைப்பற்றினர். இந்த படத்தின் ...

Read More »

ஒரு டுவிட் உங்கள் ஒற்றுமையில் பாதிப்பை ஏற்படுத்துகிறதா?

வசாயிகள் போராட்டம் குறித்த இந்திய பிரபலங்களின் நிலைப்பாட்டை நடிகை டாப்சி கடுமையாக விமர்சனம் செய்துள்ளார். டெல்லியில் நடைபெற்று வரும் விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவாக ஹாலிவுட் பாப் பாடகி ரிஹானா, நடிகை மியா கலிபா உள்ளிட்ட சர்வதேச பிரபலங்கள் டுவிட் செய்து இருந்தனர். இதனிடையே விவசாயிகள் போராட்டம் குறித்து சர்வதேச பிரபலங்கள் கருத்து தெரிவிப்பது இந்திய ஒருமைப்பாட்டிற்கு எதிராக இருப்பதாக இந்திய பிரபலங்களான கங்கனா ரனாவத், அக்‌ஷய் குமார், விராட் கோலி, ரோகித் சர்மா, சச்சின் உள்ளிட்ட பலர் டுவிட் செய்திருந்தனர். இந்நிலையில் இந்திய பிரபலங்களின் ...

Read More »

விரைவில் இயக்குனராகும் வலிமை பட தயாரிப்பாளர்

அஜித்தின் நேர்கொண்ட பார்வை, வலிமை போன்ற படங்களை தயாரித்த போனி கபூர், விரைவில் இயக்குனராக உள்ளாராம். பாலிவுட்டில் முன்னணி தயாரிப்பாளராக வலம் வருபவர் போனி கபூர். இவர் தற்போது தென்னிந்திய மொழி படங்களை தயாரிப்பதில் ஆர்வம் காட்டி வருகிறார். அந்தவகையில், தமிழில் அஜித்தின் ‘நேர்கொண்ட பார்வை’ படத்தைத் தயாரித்தார். தற்போது அஜித் நடித்து வரும் ‘வலிமை’ படத்தையும் அவரே தயாரிக்கிறார். இந்நிலையில், விரைவில் இயக்குனராக உள்ளதைப் பேட்டியொன்றில் உறுதிப்படுத்தியுள்ளார் போனி கபூர். இதுகுறித்து அவர் கூறியிருப்பதாவது: “எனக்கு திரைப்படம் இயக்க விருப்பம். 25 வயதில் ...

Read More »

திருமண நாளில் புதிய அறிவிப்பை வெளியிட்ட மகத்

மாடல் அழகி பிராச்சி மிஸ்ராவை திருமணம் செய்துக் கொண்ட நடிகர் மகத், திருமண நாளில் புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அஜித்தின் ‘மங்காத்தா’, விஜய்யின் ’ஜில்லா’, சிம்புவின் ’வந்தா ராஜாவா தான் வருவேன்’ போன்ற படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்தவர் மகத். இதைத் தொடர்ந்து கமல் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் இரண்டாம் சீசனில் மகத் போட்டியாளராக கலந்துக் கொண்டார். மகத்தும் பிரபல மாடல் ஆழகி பிராச்சி மிஸ்ராவும் காதலித்து வந்தனர். கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் 1-ம் தேதி இவர்கள் இருவரும் திருமணம் செய்துக் ...

Read More »

நெற்றியில் குங்குமம்…. ரகசிய திருமணமா?

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பிரபலமான நடிகை சனம் ஷெட்டி, நெற்றியில் குங்குமம் வைத்துக்கொள்வது ஏன் என்பது குறித்து விளக்கம் அளித்துள்ளார். தமிழ் பிக்பாஸ் நிகழ்ச்சியின் 4-வது சீசனில் போட்டியாளராக கலந்து கொண்டவர் நடிகை சனம் ஷெட்டி. இவரும் பிக்பாஸ் 3 போட்டியாளரான தர்ஷனும் காதலித்து வந்தனர். ஆனால் நிச்சயதார்த்தம் நடந்த பிறகு, இருவரிடையே மனக்கசப்பு ஏற்பட்டதால் திருமணம் நின்றது. இந்நிலையில், பிக்பாஸ் நிகழ்ச்சியின் போதே நெற்றி வகிடில் குங்குமம் வைத்து காணப்பட்ட சனம் ஷெட்டி, தற்போது நிகழ்ச்சியை விட்டு வெளியே வந்த பின்னரும் சில ...

Read More »