Tag Archives: ஆசிரியர்தெரிவு

ஆசிரியர் சங்கம் நிபந்தனைகளுடன் கல்வி அமைச்சரைச் சந்திக்கத் தயார்

ஆசிரியர் சங்கம் நிபந்தனைகளுடன் கல்வி அமைச்சரைச் சந்திக்கத் தீர்மானித்துள்ளது. கல்வி அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் மற்றும் கல்வி அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில பெரேரா ஆகிய இருவரும் இதுவரை காலம் நித்திரையிலிருந்து தற்போது தான் விழித்து ஆசிரியர் சங்கத்துடன் கலந்துரையாடலுக்கு நேற்றைய தினம் ஒத்துக் கொண்டுள்ளனர் என ஆசிரியர் சங்கம் தெரிவித்துள்ளது. ஆசிரியர்கள் இணைய கற்பித்தலிலிருந்து விலகி இன்றுடன் நான்கு நாட்கள் ஆகும் என அதன் தலைவர் பிரியந்த பெர்னாண்டோ தெரிவித்தார். முதலாவது நிபந்தனையின் கீழ் பல பிரச்சினைகள் உள்ளன. எனவே நாங்கள் ஆர்ப்பாட்டத்தைக் கைவிடப் ...

Read More »

அவுஸ்திரேலியாவில் தமிழ் இளைஞர் ஒருவர் கைது!

நாவலப்பிட்டிய பகுதியைச் சேர்ந்த 13 வயதுடைய சிறுமி ஒருவர் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பில் அவரது தந்தை உட்பட 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல் துறை ஊடகப் பேச்சாளரும் சிரேஷ்ட பிரதிகாவல் துறை மா அதிபருமான அஜித் ரோஹன தெரிவித்துள்ளார். சந்தேகநபர்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நிலையில், சம்பவம் தொடர்பில் மேலும் 6 பேர் கைது செய்யப்பட உள்ளதாக காவல் துறை ஊடக பேச்சாளர் தெரிவித்தார்.

Read More »

24 ஆண்டுகளுக்கு முன்பு கடத்தப்பட்ட மகனை தேடி கண்டுபிடித்த தந்தை

24 ஆண்டுகளாக மகனை தேடி 20 மாகாணங்களில் கிட்டத்தட்ட 5 லட்சம் கி.மீ. பயணம் செய்துள்ளார் அந்த பாசக்கார தந்தை. சீனாவில் குழந்தை கடத்தல் மிகப்பெரும் பிரச்சனையாக இருந்து வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் ஆயிரக்கணக்கான குழந்தைகள் கடத்தப்படுகின்றனர். இந்நிலையில் சீனர் ஒருவர் 2 வயதில் கடத்தப்பட்ட தனது மகனை 24 வருடங்களாக தேடி இறுதியில் அவனுடன் இணைந்த நெகிழ்ச்சி சம்பவம் நடந்துள்ளது. கடந்த 1997-ம் ஆண்டு ஷாங்டாங் மாகாணத்தை சேர்ந்த குவோ கேங்டாங் என்பவரின் 2 வயது மகன் வீட்டுக்கு வெளியே விளையாடி கொண்டிருந்தபோது ...

Read More »

ஜனநாயகத்தின் மீதான தாக்குதல்கள் ஆகியவற்றை எதிர்த்து செயல்படுவதற்காகாக அழைப்பு

ஹிஜாஸ் ஹெஸ்புல்லா அஹ்னப் ஜஸீம் ஆகியோரின் தடுப்புக்காவல்இ முஸ்லீம் மக்களிற்கு எதிரான வன்முறை ஜனநாயகத்தின் மீதான தாக்குதல்கள் ஆகியவற்றிணை எதிர்த்து செயற்படுவதற்கு இலங்கையின் 96 கல்விமான்கள் அழைப்பு விடுத்துள்ளனர். அறிக்கையொன்றில் ஹிஜாஸ் ஹெஸ்புல்லா அஹ்னப் ஜஸீம் ஆகியோர் உடனடியாக விடுதலை செய்யப்படவேண்டும்அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்படும் ஜனநாயக விரோத செயற்பாடுகளை நிறுத்தவேண்டும் பயங்கரவாத தடுப்புச்சட்டங்களை இரத்து செய்யவேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ள அவர்கள் மேலும் தெரிவித்துள்ளதாவது பல தசாப்தகால பெரும்பான்மை அரசியல் மற்றும் அண்மைக்காலத்தில் இடம்பெற்று வரும் எதேச்சையதிகாரமும் இராணுவமயமாக்கலும் எமது ஜனநாயகத்தின் அடித்தளத்தை ஆட்டம் காணச் ...

Read More »

விடுதலைப்புலிகள் அமைப்பினை மீள உருவாக்க முயற்சித்தார் என்ற குற்றச்சாட்டின் கீழ் கட்டாரிலிருந்து நாடு கடத்தப்பட்டவர் கைது

கட்டாரிலிருந்து நாடு கடத்தப்பட்ட தமிழர் ஒருவரை விடுதலைப்புலிகள் அமைப்பினை மீள உருவாக்க முயற்சித்தார் என்ற குற்றச்சாட்டின் கீழ் சிஐடியினர் கைதுசெய்துள்ளனர். காவல் துறை பேச்சாளர் அஜித்ரோகண இதனை தெரிவித்துள்ளார். பாக்கியதுரை நகுலேசன் என்பவரே சிஐடியினரால் கைதுசெய்யப்பட்டுள்ளார். இவர் 2019 ம் ஆண்டு கட்டாருக்கு சென்றவர் என காவல் துறை பேச்சாளர் தெரிவித்துள்ளார். குறிப்பிட்ட நபர் விடுதலைப்புலிகள் அமைப்பை மீள உருவாக்குவதற்கான நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்தார் என தெரிவித்துள்ள காவல் துறை  பேச்சாளர் அவருக்கு எதிராக சர்வதேச காவல் துறை ஊடாக பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்தது எனவும் குறிப்பிட்டுள்ளார். ...

Read More »

அமைதியான முறையில் ஆர்ப்பாட்டங்களை மேற்கொள்வதற்கு மக்களிற்கு உரிமையுள்ளது- ஐநா பிரதிநிதி

அமைதியான முறையில் ஆர்ப்பாட்டம் செய்வதற்கு மக்களிற்கு உள்ள உரிமைக்கு ஆதரவாக இலங்கைக்கான ஐக்கியநாடுகளின் நிரந்தர வதிவிடப்பிரதிநி ஹனா சிங்கர் கருத்து வெளியிட்டுள்ளார். ஒன்றுகூடுவதற்கான உரிமையில் ஆர்ப்பாட்டங்களிற்கான உரிமையும் அடங்கியுள்ளது என அவர் டுவிட்டர் பதிவில் தெரிவித்துள்ளார். கருத்துசுதந்திரம் பொதுமக்கள் கொள்கைகளில் தாக்கம் செலுத்துதல் போன்ற ஏனைய உரிமைகளை பயன்படுத்துவதற்கு அமைதியாக ஒன்றுகூடுவதற்கான உரிமை உதவுகின்றது என அவர் தெரிவித்துள்ளார். கொரோனாவைரசினை கட்டுப்படுத்;துவதற்கான கட்டுப்பாடுகள் பொதுமக்களின் சுகாதாரத்தை பாதுகாக்கின்ற நியாயமான நடவடிக்கைகளிற்கு அப்பால் செல்லாமலிருப்பது அவசியம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Read More »

சம்பந்தனை கட்சியின் தலைமைப்பதவியிலிருந்து நீக்குவதற்கான முயற்சி எதுவும் இடம்பெறவில்லை

தமிழ்தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா சம்பந்தனை கட்சியின் தலைமைப்பதவியிலிருந்து நீக்குவதற்கான முயற்சிகள் எவையும் இடம்பெறவில்லை என கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா மோர்னிங்கிற்கு தெரிவித்துள்ளார். கிழக்கு மாகாணத்தை சேர்ந்த அரசியல்வாதியொருவர் தமிழ்தேசிய கூட்டமைப்பின் தலைமைத்துவத்தை கைப்பற்ற முயல்கின்றார் என நான் தெரிவிக்கவில்லை என மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார். நான் அன்று இந்திய தூதுவரை சந்திப்பதற்காக கொழும்பிலிருந்தேன் அவ்வாறான நிலையில் நான் எப்படி யாழ்ப்பாணத்தில் கருத்து தெரிவிக்க முடியும் என அவர் கேள்வி எழுப்பியுள்ளார். தமிழ்தேசிய கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் அனைத்து கட்சிகளும் ...

Read More »

இன்று சர்வதேச மலாலா தினம்

இளம் வயதில் அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற மலாலா யூசுப்சாயின் பிறந்த நாளான ஜூலை 12ம் தேதி, சர்வதேச மலாலா தினமாக கொண்டாடப்படுகிறது. பாகிஸ்தானைச் சேர்ந்த இளம் போராளியான மலாலா, பெண்களின் கல்வி உரிமைக்கான குரல் கொடுத்ததால், பயங்கரவாதிகளின் தாக்குதலுக்கு இலக்கானவர். 2012 ஆம் ஆண்டு, பெண்களுக்கான உரிமை குறித்து பிரசாரத்தில் ஈடுபட்டபோது தலிபான்களால் சுடப்பட்டு உயிருக்கு ஆபத்தான நிலைக்குச் சென்றார் மலாலா. மரணத்தின் விளிம்பு வரை சென்று மீண்ட அவர், பயந்து ஒதுங்கிவிடாமல் தனது கருத்துக்களை முன்பைவிட வலுவாக முன்வைத்தார். 2013 ஆம் ...

Read More »

போராட்டம் வெடிக்கும், எச்சரிக்கிறார் ரவிகரன்

முல்லைத்தீவு – முள்ளிவாய்க்கால் கிழக்கு கிராம சேவகர்பிரிவுக்கு உட்பட்ட வட்டுவாகல் கிராமத்தில் 617 ஏக்கருக்கும் மேற்பட்ட காணிகளை அங்கு நிலைகொண்டிருக்கும் கோத்தாபாய கடற்படை முகாமிற்காக அபகரிக்க முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது. அவ்வாறு தமிழ் மக்களின் காணிகளை கடற்படை முகாமிற்காக அபகரித்தால், மக்களோடு இணைந்து எதிர்ப்பு ஆற்பாட்டத்தில் இறங்குவோம் என முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் அவர்கள் தெரிவித்துள்ளார். முள்ளிவாய்க்கால் கிழக்கு, வட்டுவாகல் பகுதியில் அமைந்துள்ள குறித்த தமிழ் மக்களுக்குரிய 617ஏக்கருக்கும் மேற்பட்ட காணிகளை கடந்த 2017ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் ஒன்றிற்கு ...

Read More »

மூளை என்றொரு மின்தடம்

அமெரிக்காவைச் சேர்ந்த நரம்பியலாளரும், பிபிசியில் ஒளிபரப்பாகும் ‘தி ப்ரெய்ன்’ என்ற புகழ்பெற்ற தொடர் நிகழ்ச்சியை வழங்குபவருமான டேவிட் ஈகிள்மேன், மனித மூளையின் அசாத்தியமான நெகிழ்வுத்தன்மை குறித்து சமீபத்தில் எழுதியுள்ள ‘லைவ்வயர்ட்’ நூல் குறித்து ‘தி கார்டியன்’ இதழுக்கு ஒரு நேர்காணலை அளித்துள்ளார். புதிய அனுபவங்களுக்கேற்பத் தன்னைத் தகவமைத்துக்கொள்வதில் மூளை எப்படிச் சிறந்து விளங்குகிறது என்பதை இந்த நேர்காணலில் பகிர்கிறார். செவித்திறன் குறைபாடு உள்ளவர்களுக்காக இவர் கைக்கடிகாரத்தின் வடிவத்தில் உருவாக்கிய ‘பஸ்’ (buzz) என்ற கருவி, ஒலியை வெவ்வேறு அதிர்வு வடிவங்களாகப் பெயர்த்து என்ன சத்தம் ...

Read More »