அவுஸ்ரேலியா செல்லும் இங்கிலாந்து அணியுடன் பென் ஸ்டோக்ஸ் செல்லமாட்டார்!

ஆஷஸ் தொடரில் விளையாடுவதற்காக அவுஸ்ரேலியா செல்லும் இங்கிலாந்து அணியுடன் பென் ஸ்டோக்ஸ் செல்லமாட்டார் என இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.

இங்கிலாந்து அணியின் முன்னணி ஆல்ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ். அந்த அணியின் முதுகெலும்பாக உள்ளார். ஆக்ரோஷமாக விளையாடும் பென் ஸ்டோக்ஸ், மைதானத்திற்கு வெளியில் ஒழுங்கீனமாக நடந்து கொள்வதுண்டு.

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கெதிரான 3-வது ஒருநாள் போட்டியில் விளையாடிய பின்னர், நள்ளிரவு கிளப் சென்றார். பின்னர் அங்குள்ள நபர் ஒருவரிடம் தகராறில் ஈடுபட்டார். இதனால் காவல் துறை அவரை கைது செய்து சிறையில் அடைத்தது. அதன்பின் ரலீஸ் செய்தது.

பென் ஸ்டோக்ஸ் ரகளையில் ஈடுபட்ட வீடியோவை காவல் துறை வெளியிட்டனர். இந்நிலையில் ஆஷஸ் தொடரில் விளையாடுவதற்காக இங்கிலாந்து அணி வரும் 28-ந்திகதி அவுஸ்ரேலியா புறப்படுகிறது. இங்கிலாந்து அணியுடன் பென் ஸ்டோக்ஸ் செல்லமாட்டார் என்று இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது. இதனால் ஸ்டீவன் பின் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.

பிரச்சினையில் ஈடுபட்ட பென் ஸ்டோக்ஸ் ஆஷஸ் தொடரில் பங்கேற்காவிடில், இங்கிலாந்து அணிக்கு பெரிய இழப்பாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.