பத்து நொடிகளில் புற்றுநோய் திசுக்களைக் கண்டறியும் பேனா ஒன்றினை டெக்சாஸ் பல்கலைகழக விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
கண்டுபிடிக்கப்பட்ட இந்தக் கருவியானது வேகமாகவும், பாதுகாப்பாகவும் மட்டுமல்லாமல் கூடுதல் துல்லியத்துடனும் செயற்படுமெனவும் கூறப்படுகிறது.
அத்துடன் புற்றுநோய்க் கட்டிகளை அகற்றும் அறுவை சிகிச்சை செய்ய உதவும் என விஞ்ஞானிகள் மேலும் கூறியுள்ளனர்.
சிகிச்சைக்குப் பின்னர் எதாவது புற்றுநோய் அணுக்கள் உடலை விட்டு வெளியேறாமல் இருந்துவிடும் துயரத்தைத் தவிர்க்கவும் இது உதவி புரியும்.
இதேவேளை சயின்ஸ் டிரான்ஸ்லேஷனல் மெடிசின் எனும் மருத்துவ சஞ்சிகையில் இந்தப் பரிசோதனைகள் குறித்த கட்டுரை வெளியிடப்பட்டுள்ளது என்பது சுட்டிக்காட்டத்தக்கது.
Eelamurasu Australia Online News Portal