பாலா இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ், ஜோதிகா நடித்து வந்த ‘நாச்சியார்’ படத்தின் படப்பிடிப்புகள் அனைத்தும் முழுவதுமாக முடிந்துள்ளது.
பாலா இயக்கத்தில் தற்போது உருவாகி உள்ள படம் `நாச்சியார்’. இந்த படத்தில் இசையமைப்பாளரும் நடிகருமான ஜி.வி.பிரகாஷ், ஜோதிகா நடிக்கிறார்கள். முக்கிய கதாபாத்திரத்தில் ராக்லைன் வெங்கடேஷ், காவ்யா ஆகியோர் நடித்துள்ளார்கள். இப்படத்தில் நடிகை ஜோதிகா காவல் துறை அதிகாரியாக நடித்துள்ளார். இளையராஜா இசையமைக்கும் இப்படத்தை பாலா தனது பி ஸ்டூடியோஸ் நிறுவனம் மூலம் தயாரித்துள்ளார்.
விறுவிறுப்பாக நடைபெற்று வந்த இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது முழுவதுமாக நிறைவு பெற்றுள்ளது. சமீபத்தில் ஜி.வி.பிரகாஷ் சம்மந்தப்பட்ட காட்சிகள் அனைத்தும் முடிந்தது. மேலும் இப்படத்தின் டப்பிங் வேலைகளை முடித்துவிட்டதாக நடிகர் ஜி.வி.பிரகாஷ் ஏற்கனவே தெரிவித்துள்ளார். தற்போது மீதமுள்ள படப்பிடிப்பு காட்சிகளை பாலா இன்று முடித்திருக்கிறார்.
தற்போது இறுதிகட்ட பணிகளில் படக்குழு தீவிரம் காட்டி வருகின்றனர். விரைவில் இப்படத்தின் டீசர் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Eelamurasu Australia Online News Portal