நான் நாடாளுமன்றத்திற்கு தகுதியானவர் இல்லை!- அவுஸ்ரேலிய துணைப் பிரதமர்

இரட்டை குடியுரிமை கொண்டிருப்பதால் தான் நாடாளுமன்றத்திற்கு தகுதியானவர் இல்லை என அவுஸ்ரேலிய துணைப் பிரதமர் பர்னாபி ஜோய்ஸ் (Barnaby Joyce) தெரிவித்துள்ளார்.

அவுஸ்ரேலியாவிலும் நியூசிலாந்திலும் இரட்டைக்குடியுரிமை கொண்டவர் என்பது சுட்டிக்காட்டத்தக்கது.

அவுஸ்திரேலிய துணைப் பிரதமரின் இந்த அறிவிப்பால் ஆளும் கன்சர்வேடிவ் ஆட்சியை நிலைகுலைய செய்யும் என எதிர்வு கூறப்படுகிறது.

அத்துடன் அவர் பதவி விலகினால், அரசு பெரும்பான்மையை இழக்க நேரிடலாம் என அரசியல் விமர்சகர்கள் தெரிவித்துள்ளனர்.

ஜோய்ஸின் தாயார் அவுஸ்திரேலிய பிரஜை. அவரது தந்தை நியூசிலாந்தில் பிறந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. இவர்கள் கடந்த 1947ஆம் ஆண்டு அவுஸ்திரேலியாவில் குடியேறியுள்ளனர்.