அர­சி­ய­ல­மைப்பில் வேறு எந்­த­வொரு திருத்­தமும் செய்­ய­வேண்­டிய அவ­சியம் இல்லை – அஸ்­கி­ரிய பீடம்

தேர்தல் திருத்தம் தவிர அர­சி­ய­ல­மைப்பில் வேறு எந்­த­வொரு திருத்­தமும் செய்­ய­வேண்­டிய அவ­சியம் இல்லை. புதிய அர­சி­ய­ல­மைப்­புக்கு பெளத்த பீடம் முழு­மை­யாக எதிர்ப்பை தெரி­விக்­கின்­றது என்று அஸ்­கி­ரிய மகா­நா­யக பீடம் தெரி­வித்­துள்­ளது. அர­சி­ய­ல­மைப்பு தொடர்பில் அர­சியல் வாதி­களின் கருத்­துக்­களில் நம்­பிக்கை இல்லை. புதிய அர­சியல் அமைப்பு நட­வ­டிக்­கைகள் முன்­னெ­டுக்­கப்­படும் என்றால் நாட்டில் உள்ள சகல மகா­நா­யக்க தேரர் பீடமும் ஒன்­று­கூடி போரா­ட­வேண்­டிய நிலைமை வரும் எனவும் அஸ்­கி­ரிய மகா­நா­யக்க பீடம் குறிப்­பிட்­டுள்­ளது.

புத்­த­சா­சன அமைச்சின் பிர­தி­நி­திகள் குழு நேற்று முன்­தினம் இரவு அஸ்­கி­ரிய மகா­நா­யக தேரர்­க­ளுடன் சந்­திப்­பொன்றை மேற்­கொண்டு புதிய அர­சியல் அமைப்பில் பெளத்த மத பாது­காப்பு குறித்து கலந்­து­ரை­யாடல் ஒன்றை மேற்­கொண்­டி­ருந்­தனர். இந்த சந்­திப்­பி­லேயே ஆன­ம­டுவே தம்­ம­தாச அனு­நா­யக தேரர் இதனை வலி­யு­றுத்­தி­யுள்ளார்.

அவர் இதன்­போது மேலும் தெரி­வித்­துள்­ள­தா­வது

இந்த நாட்டில் இது­வரை இருந்த அர­சியல் அமைப்பில் எந்த முரண்­பா­டு­களும் இல்லை. எனினும் புதிய அர­சியல் அமைப்பு ஒன்று உரு­வாக்க வேண்டும் என ஸ்ரீலங்கா சுதந்­திர கட்சி கூறு­மாயின், மாற்றம் வேண்டும் என தெரி­விப்­ப­தாயின் தேர்தல் முறை­மையில் மாற்­றத்தை கொண்­டு­வர வேண்­டுமே தவிர வேறு எந்­த­வொரு மாற்­றமும் செய்ய வேண்­டிய அவ­சியம் இல்லை.

தேர்தல் முறை­மையில் மாற்றம் கொண்­டு­வ­ரு­வது மற்றும் ஒரு­சில முக்­கிய விட­யங்கள் தவிர்த்து புதிய அர­சி­ய­ல­மைப்பு ஒன்றை கொண்­டு­வ­ரு­வ­தற்க பெளத்த மதத் தலை­வர்கள் முழு­மை­யாக எதிர்ப்பை தெரி­விக்­கின்­றனர். புதிய அர­சி­ய­ல­மைப்­புக்கு நாம் முழு­மை­யாக எதிர்ப்பை தெரி­விக்­கின்றோம். ஜனா­தி­பதி முறைமை அவ­சியம். நிறை­வேற்று ஜனா­தி­பதி முறைமை இந்த நாட்டில் இருக்க வேண்டும். மாற்றம் கொண்­டு­வர வேண்டும் என்றால் அது தேர்தல் திருத்­தங்­களில் மாத்­திரம் கொண்­டு­வர வேண்டும்.

எதிர்­வரும் ஆகஸ்ட் மாதம் புதிய அர­சி­ய­ல­மைப்பு திட்­டத்தை முன்­வைப்­ப­தாக அர­சாங்கம் தெரி­வித்­துள்­ளது. இன்னும் ஒரு மாத காலமே உள்­ளது. இதில் அனை­வ­ரதும் கருத்­துக்கள் எவ்­வாறு உள்­வாங்­கப்­பட்­டன என்­பது தெரி­ய­வில்லை. இந்த நட­வ­டிக்­கைகள் முன்­னெ­டுக்­கப்­படும் என்றால் நாட்டில் உள்ள சகல மகா­நா­யக தேரர் பீடமும் ஒன்­று­கூடி போரா­ட­வேண்­டிய நிலைமை வரும். இப்­போது இவர்­களின் பயணம் எவ்­வா­றா­னது என்­பது எமக்கு தெரி­கின்­றது.

புதிய அர­சி­ய­ல­மைப்பு விட­யத்தில் ஆரம்­பத்தில் மகா­நா­யக தேரர்கள் கருத்­துக்­களை முன்­வைத்­துள்­ளனர். அதேபோல் அர­சாங்­கத்தின் ஒரு­சில விட­யங்கள் தொடர்பில் கருத்­துக்­களை முன்­வைத்­துள்­ளனர். இந்த விட­யங்­களை நாம் நல்ல எடுத்­துக்­காட்­டாக கொண்டு தொடர்ந்தும் எமது நிலைப்­பாட்டில் இருந்து செயற்­ப­ட­வுள்ளோம்.

புதிய அர­சி­ய­ல­மைப்பு தொடர்பில் ஒவ்­வொரு அர­சியல் வாதி­களும் கூறும் கருத்­துக்கள் மற்றும் ஒவ்­வொரு தலை­வர்­களும் எம்­மிடம் வந்து கூறும் கருத்துக்கள் தொடர்பில் எமக்கு நம்பிக்கை இல்லை. அரசாங்கம் எதைக் கூறினாலும் இந்த நாட்டில் பெளத்த சிங்கள மக்களை பாதிக்கும் நடவடிக்கைகளை எம்மால் வேடிக்கை பார்க்க முடியாது. ஆகவே நாம் தெளிவான நிலைபாட்டில் இருந்து எமது கருத்துக்களை முன்வைத்துவருகின்றோம் என்றார்.