6 மாதம் தடை: அவுஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் எச்சரிக்கை

கிரிக்கெட் வாரியத்துடன் ஊதிய ஒப்பந்தத்திற்கு சம்மதம் தெரிவிக்காவிடில் 6 மாதம் தடைவிதிக்கப்படும் என்று அவுஸ்ரேலிய லியா கிரிக்கெட் வாரியம் எச்சரித்துள்ளது.

அவுஸ்ரேலிய கிரிக்கெட் வாரியத்திற்கும், கிரிக்கெட் வீரர்களின் சங்கத்திற்கும் இடையே ஊதியம் தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவதில் தொடர்ந்து சிக்கல் ஏற்பட்டு வருகிறது.

நாங்கள் கேட்கும் ஊதியம் கிடைக்கும் வரை போராடுவோம். ஆஷஸ் தொடரைக்கூட புறக்கணிக்கலாம் என்று துணை கப்டன் டேவிட் வார்னர் கூறியுள்ளார்.

ஏற்கனவே போடப்பட்ட ஒப்பந்தம் வரும் 30-ந்திகதியுடன் முடிவடைகிறது. அதன்பின் 1-ந்திகதியில் இருந்து புதிய ஒப்பந்தம் போடப்பட வேண்டும். வீரர்கள் ஒப்பந்தத்திற்கு ஒத்துழைக்காததால், 6 மாதம் தடையை சந்திக்க வேண்டியிருக்கும் என்று அவுஸ்ரேலிய  கிரிக்கெட் வாரியம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இதுகுறித்து அவுஸ்ரேலிய கிரிக்கெட் வாரியத்தின் ஹோவார்ட் கூறுகையில் ‘‘ஆஸ்திரேலிய வீரர்கள் (ஒப்பந்தத்தில் ஈடுபடாத வீரர்கள் உள்பட) ஐ.சி.சி. ஒப்புதலுடன் நடைபெறும் வெளிநாட்டு கிரிக்கெட் வாரியத்தால் நடத்தப்படும் டி20 கிரிக்கெட் லீக்கில் விளையாட முடியாது.

அதில் விளையாட அவுஸ்ரேலிய  கிரிக்கெட் வாரியத்தின் அனுமதி கட்டாயம் தேவை. அதேபோல் காட்சி கிரிக்கெட்டிலும் விளையாட 6 மாதத்திற்கு அனுமதி வழங்க இயலாது.

ஜூன் 30-ந்திகதியுடன் வீரர்களின் ஒப்பந்தம் முடிவடைகிறது. அதன்பின் அவர்கள் அவுஸ்ரேலிய  கிரிக்கெட் வாரியத்தின் ஊழியர்கள் கிடையாது’’ என்றார்