இறக்கும் தருவாயில் இருந்த குழந்தையின் புகைப்படத்தை வெளியிட்ட தாய்

பிறந்து 32 நாட்களில் உயிரிழந்த குழந்தை, அசைவுடன் இருக்கும் போது எடுத்த புகைப்படத்தை குழந்தையின் தாய் வெளியிட்டுள்ளார்.

அவுஸ்திரேலியாவை சேர்ந்தவர் Catherine Hughes. இவருக்கு கடந்த மார்ச் மாதத்தில் ஆண் குழந்தை பிறந்துள்ளது. Riley என பெயரிடப்பட்ட குழந்தைக்கு பிறந்தவுடனேயே கிருமி தொற்று நோய் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக தொடர்ந்து இருமல் வந்துள்ளது. இதனால் மருத்துவமனையில் உள்ள மிஷினில் குழந்தையை வைத்து மருத்துவர்கள் பாதுகாத்து வந்தார்கள்.

ஆனாலும், Riley உயிரிழந்து விடுவான் என மருத்துவர்கள் கூறியுள்ளனர். இதையடுத்து தனது குழந்தை கை, கால்களை அசைக்கும் நிலையில் Catherine புகைப்படங்களை எடுத்துள்ளார்.

பின்னர், பிறந்து 32 நாட்களில் குழந்தை உயிரிழந்துள்ளது. Catherine கர்ப்பமாக இருந்த போதே சரியான அளவில் தடுப்பூசிகளை போட்டு கொண்டிருந்தால் குழந்தையால் நோயை எதிர்த்து போராடியிருக்க முடியும் என பின்னர் மருத்துவர்கள் கூறினார்கள்.

இந்நிலையில் தான் எடுத்த புகைப்படங்களை Catherine பேஸ்புக்கில் கனத்த மனதுடன் பதிவேற்றியுள்ளார்.

625.0.560.350.160.300.053.800.668.160.90 (2)