யாழ்.நூலக எரிப்பு! தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் நினைவேந்தல்! நிகழ்வு

 

யாழ்.பொது நூலகம் எரிக்கப்பட்ட சம்பவத்தின் 36ஆவது நினைவேந்தல் நிகழ்வு   தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் நேற்று (1)   மாலை 6.00 மணியளவில் யாழ். பொது நூலகம் முன்பாக  இடம்பெற்றது.

அந்நிகழ்வில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின்  தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் , செயலாளர் செல்வராசா கஜேந்திரன் , தமிழ் தேசிய மக்கள் முன்னணியின்மகளிர் அணி பொறுப்பாளர்  பத்மினி சிதம்பரநாதன் , கட்சியின் உறுப்பினர்கள் பொது மக்கள் என பலர் கலந்து கொண்டனர்.

நினைவு  பகிர்வினை ஆய்வாளர் நிலாந்தன், ஆய்வாளர் ஜோதிலிங்கம், ஊடகவியாளர் சாளின், ஊடகவியாளர் ஜெரா ஆகியோர் வழங்கினர்.

DBPRWViU0AANcKQ DBPRWVlV0AEIywe