அர்ஜுனின் 150-வது படம் குறித்த புதிய தகவல்

ஆக்‌ஷன் கிங் அர்ஜுன் நடிப்பில் உருவாகி இருக்கும் அவரது 150-வது படமான நிபுணன் குறித்த அடுத்த அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது.

சமீபத்தில் வெளி வந்து மாபெரும் வெற்றி பெற்ற படங்களின் வெற்றிக்கு மிக முக்கிய காரணமாக சொல்லப்படுவது, அந்த படங்களின் கதை அம்சமும், படமாக்கப்பட்ட விதமும் தான். அந்த அடிப்படையில் தாயராகி விரைவில் வெளி வரவிருக்கும் படம் `நிபுணன்’.

ஆக்‌ஷன் கிங் அர்ஜுன் உள்ளிட்ட நட்சத்திரப் பட்டாளங்களுடன் வெளியாக உள்ள இப்படம் அர்ஜுனுக்கு 150-வது படம் என்பது குறிப்பிடத்தக்கது.

`நிபுணன்’ என்பது படத்தின் கதாநாயகனான அர்ஜுனை குறிப்பிடுவது. கற்பனைக்கும் எட்டாத விதத்தில் தன்னுடைய பணியில்,  அறிவாற்றலினாலும், கடும்  உழைப்பினாலும்  உயர பறக்கும் ஒரு சாதனையாளனின் கதை தான் `நிபுணன்’. இப்படத்தில் பிரசன்னா, வரலட்சுமி சரத் குமார், வைபவ், ஸ்ருதி ஹரிஹரன் உள்ளிட்ட பலரும் நடித்திருக்கின்றனர்.

ஹாலிவுட் படங்களை பார்த்து அவர்களது கதை அம்சத்தை பாராட்டி, அவர்களின் தயாரிப்பு திறனை பாராட்டும் ஒரு சராசரி ரசிகனின் தேவையை `நிபுணன்’ படம்  பூர்த்தி செய்யும் என்று படத்தின் தயாரிப்பாளர்களுள் ஒருவரான அருண் வைத்தியநாதன் தெரிவித்துள்ளார்.

நமது நாட்டை உலுக்கிய ஒரு மிக முக்கிய சம்பவத்தை அடிப்படையாகக் கொண்ட கதைதான் `நிபுணன்’. அரவிந்த் கிருஷ்ணாவின் ஒளிப்பதிவில், நவீனின் இசை அமைப்பில், சதீஷ் சூர்யாவின் படத்தொகுப்பில், உமேஷ், சுதன் சுந்தரம், ஜெயராமன், மற்றும் அருண் வைத்தியநாதன் இணைந்து பாஷன் ஸ்டுடியோஸ் சார்பில் இப்படத்தை தயாரிக்கின்றனர்.

இந்தப் படத்தின் டீசரை வருகின்ற மே 15-ஆம் திகதி வெளியிட உள்ளதாக படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.