‘விஸ்வரூபம்-2’ படக்குழுவின் அடுத்த அதிரடி திட்டம்

கமலின் ‘விஸ்வரூபம்-2’ படக்குழுவினர் அடுத்ததாக அதிரடி திட்டம் ஒன்றை அறிவித்துள்ளார்கள்.

கமல் நடிப்பு, இயக்கம் என உருவாகியுள்ள ‘விஸ்வரூபம் 2’ படத்தை ஒருவழியாக இந்த வருடத்தில் வெளியிட திட்டமிட்டுள்ளார் கமல். விஸ்வரூபம் படம் எடுக்கும்போதே, அதன் இரண்டாம் பாகத்திற்கும் உண்டான சில காட்சிகளை படமாக்கிவிட்டதாக கமல் தெரிவித்தார். அதைத் தொடர்ந்து விஸ்வரூபம் வெளியான பிறகும் மீதமிருக்கும் காட்சிகளை படமாக்கிவிட்டு, இறுதிக்கட்ட பணிகளில் இறங்கினார்.

விஸ்வரூபம்-2 க்கான படப்பிடிப்பு இன்னும் 1 நாட்கள் பாக்கி இருக்கிறதாம். ஆகவே, அந்த 10 நாட்கள் படப்பிடிப்பையும் விரைவில் நடத்தி முடித்துவிட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளார்களாம். இந்த படப்பிடிப்பை சென்னை ராணுவ அதிகாரிகள் அகாடமியில் வைத்து படமாக்க முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இங்கு முக்கியமான காட்சிகள் படமாக்கப்பட உள்ளதாகவும் கூறப்படுகிறது. விரைவில் படப்பிடிப்பை நடத்தி முடித்துவிட்டு அடுத்தகட்ட பணிகளை மேற்கொள்ளவும் திட்டமிட்டுள்ளனர். இப்படத்தை இந்த வருடத்தின் இறுதியில் வெளியிடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இப்படத்தை ராஜ்கமல் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனம் பிரம்மாண்டமாக தயாரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.