அவுஸ்ரேலியா நாட்டின் முக்கிய நகரங்களில் வீடுகளின் விலை மிகவும் அதிகரித்திருப்பதையடுத்து முதன்முதலாக வீடு வாங்குவோர் பெரும் நிதி நெருக்கடியை சந்திப்பதால் அவர்களுக்கு உதவும் வகையில் புதிய திட்டமொன்றை அரசு அடுத்த மாதம் Budget -நிதி நிலை அறிக்கையில் அறிவிக்கும் என்று கூறப்படுகிறது.
ஒருவர் ஈட்டும் வருமானத்திற்கு வரி விதிக்கும் முன்பே அந்த சம்பளத்தின் அல்லது வருமானத்தின் ஒரு பகுதியை வீடுவாங்க அவர் சேமிக்கவும், அந்த சேமிப்பிற்கு அரசு வரி வசூலிப்பதில்லை என்பதாகவும் புதிய திட்டமொன்றை அரசு அறிவிக்கலாம் என்று தெரிகிறது.
Eelamurasu Australia Online News Portal