முன்னாள் காதலியை 37 முறை கத்தியால் குத்தியவர்

அவுஸ்திரேலியாவில் இளைஞர் ஒருவர் தனது முன்னாள் காதலியை 37 முறை கத்தியால் குத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சிட்னி, Turella பகுதியில் உள்ள வீட்டிலே இச்சம்பவம் அரங்கேறியுள்ளது. முன்னதாக, 25 வயதான இளம் பெண் ஒருவர் தனது 29 வயது காதலனை விட்டு பிரிந்துள்ளார்.

இதனால், கோபமடைந்த காதலன், காதலியின் அழகான தோற்றத்த அழிக்க Turella பகுதியில் உள்ள அவரது வீட்டிற்குள் நுழைந்து கத்தரிக்கோல் மூலம் முகம் உட்பட உடலில் 37 இடங்களில் குத்தி விட்டு தப்பி ஓடியுள்ளார்.

பாதிக்கப்பட்ட பெண் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். சம்பவத்தை தொடரந்து நான்கு நாட்களாக தலைமறைவாக இருந்த முன்னாள் காதலனை Tamworth பகுதியில் வைத்து பொலிசார் கைது செய்துள்ளனர்.

மேலும், அவன் மீது கொலை முயற்சி உட்பட பல பிரிவுகளில் வழக்கு பதிவு செய்துள்ளனர்.