குரங்குகளுடன் தனியாக வாழ்ந்து வந்த சிறுமி மீட்பு

குரங்குகளுடன் வனப்பகுதியில் வாழ்ந்துவந்த ஒரு சிறுமியை காவல் துறையினர் மீட்டுள்ளனர்.

குரங்குகளுடன் வாழ்ந்து வந்ததாக கூறப்படும் குழந்தை சில வாரங்களுக்கு முன்பு, உத்தரப் பிரதேச வனப்பகுதியில் சுமார் எட்டு முதல் பத்து வயது கொண்ட ஒரு சிறுமி கண்டுபிடிக்கப்பட்டார்.

அந்த சிறுமி பேசவில்லை என்றும் குரங்கு போல சைகை செய்துகொண்டிருந்ததாகவும் மருத்துவர்கள் தெரிவித்தனர்.