கீத் நொயாரை தாக்கிய சம்பவ சந்தேக நபர்களின் பிணை இரத்து!

ஊடகவியலாளர் கீத் நொயாரை தாக்கிய சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்களை பிணையில் விடுதலை செய்து கல்கிஸ்சை நீதவான் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை இரத்துச் செய்து கொழும்பு மேல் நீதிமன்றம் நேற்று உத்தரவொன்றை பிறப்பித்துள்ளது.

கீத் நொயார் தாக்கப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்களுக்கு பிணை வழங்கப்பட்டதை எதிர்த்து சட்டமா அதிபர் திணைக்களம் கொழும்பு மேல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த மேன்முறையீட்டு மனு நேற்று விசாரணைக்கு எடுக்கப்பட்டது.

இதன் போதே கல்கிஸ்சை நீதிமன்றம் பிணை உத்தரவை இரத்துச் செய்து மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.