நான் பொதுவான நபர் தான், ஆனால் பொது சொத்து கிடையாது – வித்யா பாலன்

இந்தி திரைப்படவுலகில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் வித்யா பாலன். இவர் சமீபத்தில் அளித்த தொலைக்காட்சி பேட்டி onRil , தற்போது நடித்து வரும் படத்தின் விளம்பரத்துக்காக சமீபத்தில் கொல்கத்தா சென்றிருந்தேன்.

அப்போது கொல்கத்தா விமான நிலையத்தில் ஒரு ஆண் ரசிகர் என் அருகில் வந்து என் கையை பிடித்தார். பின்னர் என் தோளில் கையை போட்டார், நான் கையை எடுக்கும் படி கூறினேன்.

அதை அவர் கேட்காமல் திரும்பவும் அதே தவறை செய்தார். இது தவறு என அதட்டிய பின்னர் தான் அவர் கையை எடுத்து என்னிடம் மன்னிப்பு கேட்டார் என கூறியுள்ளார். மேலும், நடிகையான நான் பொதுவான நபர் தான், ஆனால் பொது சொத்து கிடையாது என வித்யா பாலன் காட்டமாக கூறியுள்ளார்.