அவுஸ்ரேலியா செல்லும் கனவு கடல் நடுவில் கலைந்து போகும்!

நீங்கள் அல்லது உங்கள் அன்புக்குரிய ஒருவர் அவுஸ்ரேலியாவுக்கு குடியேற வழியொன்றைத் தேடுகின்றீர்களா? அதற்காக அவர் தெரிவுசெய்திருப்பது வியாபாரிகளால் திட்டமிட்ட முறையில் முன்னெடுக்கப்படும் படகின் மூலம் அவுஸ்திரேலியாவுக்கு கொண்டுசெல்வதாகக் கூறும் மோசடியையா?

அப்படியாயின் நீங்கள் ஏமாற்றப்பட்டுள்ளீர்கள். இதுவரை அவர்களுடன் அவுஸ்ரேலியாவுக்கு படகில் சென்ற எவரும் அங்கு காலடி எடுத்து வைத்ததில்லை. மேலும் அவர்கள் உருவாக்கித்தரும் கனவுக் கோட்டை அந்த படகுப் பயணத்தில் இல்லை.

நீங்கள் இலட்சக்கணக்கில் பணம் செலவழித்துஇ சொத்துக்களை அடகுவைத்து, ஊர் உலகிற்கு கடனாளியாகி அவுஸ்திரேலிய கனவின் பின் சென்றாலும் அதை ஒருநாளும் உங்களால் நிறைவேற்றிக்கொள்ள முடியாது. இதனால் நடப்பது சொத்துக்களை அடகுவைத்து பெற்ற பணம் உங்களுக்கு இல்லாமல் போய், நீங்கள் உலகிற்கு கடனாளியாகி, கஷ்டங்களுக்கு மத்தியில் உழைத்த சொத்துக்களும் இல்லாமல் போவது மாத்திரமே.

அவுஸ்ரேலிய கடல் எல்லைக்குள் வந்தவுடன் நீங்கள் பாதுகாப்பு பிரிவினரிடம் பிடிபடுவதுடன் அதன்பின்னர் நாடுகடத்தப்படுவீர்கள். இதனைத் தெரியாமல் வியாபாரிகளின் பொய்க்கு ஏமாற்றமடைந்து இதுவரை பல இலங்கையர்கள் இலட்சக்கணக்கான பணம் மட்டுமன்றி உயிரையும் இழந்துள்ளனர்.

எனவே நீங்களும் ஏமாறாதீர்கள்இ சட்டவிரோத படகுகளின் மூலம் ஒருநாளும் உங்களால் அவுஸ்ரேலியாவுக்கு போகவோ, அந்நாட்டில் வேலைசெய்யவோ வாய்ப்புக் கிடைக்காது.