அவுஸ்திரேலியா : தொடரை வென்றது இலங்கை

அவுஸ்திரேலியாவுக்கு எதிரான இறுதி இருபதுக்கு – 20 போட்டியில், இலங்கை அணி 41 ஓட்டங்களால் தோல்வியைத் தழுவியுள்ளது. எனினும் முன்னதாக இடம்பெற்ற இரண்டு போட்டிகளிலும் வெற்றி பெற்றிருந்த நிலையில், இலங்கை அணி  2-1 என தொடரை கைப்பற்றியுள்ளது.

இரு அணிகளுக்கும் இடையிலான மூன்றாவது இருபதுக்கு – 20 போட்டி இன்று நடைபெற்றது. போட்டியில் நாணய சுழற்சியில் வென்ற இலங்கை அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபடத் தீர்மானித்தது.

இந்நிலையில் துடுப்பெடுத்தாட ஆரம்பித்த அவுஸ்திரேலிய அணியின் ஆரம்ப வீரர்களான அரோன் பின்ஜ் (53 ஓட்டங்கள்) மற்றும் மிச்சல் கிளிஞ்ஞர் (62 ஓட்டங்கள்) என சிறப்பாக  விளையாடவே 20 ஓவர் நிறைவில் 6 விக்கெட்டுக்களை இழந்து ஆஸி அணி 187 ஓட்டங்களைப் பெற்றது.

இலங்கை அணிக்கு 188 ஓட்டங்கள் பெற்றால் வெற்றி என்ற இலக்கு நிர்ணயிக்கப்பட, இந்நிலையில் துடுப்பெடுத்தாட ஆரம்பித்த இலங்கை அணி 18 ஓவர்களுக்கு மட்டுமே தாக்குப் பிடித்து, சகல விக்கட்டுகளையும் இழந்தநிலையில் 146 ஓட்டங்களை மாத்திரம் பெற்று தோல்வியை தழுவியது.

மூன்று போட்டிகளை கொண்ட 20க்கு இருபது தொடரில் முன்னதாக இடம்பெற்ற இரண்டு போட்டிகளிலும் இலங்கை வெற்றி பெற்றிருந்த நிலையில், இலங்கை அணி  2-1 என தொடரை கைப்பற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது.