அவுஸ்ரேலியா சிறப்பாக விளையாடினாலும் தொடரை இழப்பது உறுதி

அவுஸ்ரேலிய அணி இந்தியாவுடன் 4 டெஸ்டுகளில் சிறப்பாக விளையாடினாலும் தொடரை இழப்பது உறுதி என்று இந்திய அணியில் இருந்து ஓரங்கட்டப்பட்ட சுழற்பந்து வீச்சாளர் ஹர்பஜன்சிங் கூறியுள்ளார்.

இந்திய அணியில் இருந்து ஓரங்கட்டப்பட்ட சுழற்பந்து வீச்சாளர் ஹர்பஜன்சிங் அளித்த ஒரு பேட்டியில், ‘ஆஸ்திரேலிய அணி இந்தியாவுடன் 4 டெஸ்டுகளில் விளையாட உள்ளது. இந்த தொடரில் அவுஸ்ரேலியா  சிறப்பாக விளையாடும் பட்சத்தில், இந்திய அணி தொடரை 3-0 என்ற கணக்கில் கைப்பற்றும். அந்த அணி நன்றாக ஆடினால் தான் இந்த நிலைமை.

இல்லாவிட்டால் இந்திய அணி 4-0 என்ற கணக்கில் முழுமையாக அவுஸ்ரேலியாவை நொறுக்கி விடும். இந்திய ஆடுகளங்களில் சமாளிப்பது எளிதான காரியம் அல்ல. அதுவும் முதல் பந்தில் இருந்தே பந்து சுழன்று திரும்ப ஆரம்பித்து விட்டால்,அவுஸ்ரேலிய வீரர்கள் நீண்ட நேரம் தாக்குப்பிடிக்க முடியாது. அவுஸ்ரேலிய அணி 4 சுழற்பந்து வீச்சாளர்களுடன் இங்கு வந்திருந்தாலும் சாதிக்கக்கூடிய அளவுக்கு தரம் வாய்ந்த பவுலர்களாக தெரியவில்லை.

இங்குள்ள வித்தியாசமான சூழலில் பந்து வீசுவது கடினம்’ என்றார்.