அவுஸ்ரேலியா சிறப்பாக விளையாடினால் 0-3 என தோற்கும்: ஹர்பஜன் சொல்கிறார்

இந்தியாவிற்கு எதிரான அவுஸ்ரேலியா சிறப்பாக விளையாடினால் 0-3 என தோல்வியடையும். இல்லையெனில் 0-4 என தோல்வியடையும்.

இந்தியா – அவுஸ்ரேலியா அணிகளுக்கு இடையிலான நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் வருகிற 23-ந்திகதி தொடங்குகிறது.

இந்த டெஸ்ட் தொடரில் அவுஸ்ரேலியா அணி எப்படி விளையாடும் என்பதுதான் கிரிக்கெட் ரசிகர்களின் கேள்வியாக உள்ளது.

இந்தியா அணியின் முன்னணி சுழற்பந்து வீச்சாளராக இருந்த ஹர்பஜன் சிங் இதுகுறித்து கூறுகையில் ‘‘அவுஸ்ரேலியா சிறப்பாக விளையாடினால், இந்தியா தொடரை 3-0 என வெல்லும். அவுஸ்ரேலியா சிறப்பாக விளையாடினால் மட்டுமே. இல்லையெனில் இந்தியா 4-0 என வெற்றி பெறும். இந்திய ஆடுகளம் அவர்களுக்கு சாதகமாக இருக்கும் என்று நான் நினைக்கவில்லை.

முதல் பந்தில் இருந்து பந்து டர்ன் ஆக ஆரம்பித்தால், அவர்களால் நீண்ட நேரம் தாக்குப்பிடித்து நிற்க முடியாது. பழைய அவுஸ்ரேலியா அணி என்றால் நம்பிக்கை இருக்கலாம். ஆனால் தற்போதைய அணி இந்தியாவில் வெற்றி பெறும் என்று நினைக்கவில்லை’’ என்றார்.