அவுஸ்­­ரேலியாவில் பொது இடங்­களில் முகத்தை முழு­மை­யாக மறைக்கும் ஆடை அணிய தடை!

அவுஸ்­­ரேலி­யாவில் பொது இடங்­களில் பெண்கள் முகத்தை முழு­மை­யாக மறைக்கும் ஆடை அணி­வதைத் தடை செய்­வ­தற்குத் திட்­ட­மிட்­டுள்­ள­தாக அந்­நாட்டின் ஆளுங் கூட்­டணி தீர்­மா­னித்­துள்­ளது.  தலையை மறைக்கும் துணி மற்றும் ஏனைய மத அடை­யா­ளங்­களை அரச ஊழி­யர்கள் அணிந்து வரு­வதைத் தடை செய்­வது குறித்தும் அரசு பரி­சீ­லித்து வரு­கி­றது.

அவுஸ்­­ரேலி­யாவில் வேக­மாக வளர்ந்­து­வரும் தீவிர வல­து­ சாரி சுதந்­திரக் கட்­சியின் வளர்ச்­சியை தடுப்­ப­தற்­கான முயற்­சி­களின் ஒரு பகு­தி­யாக அரசின் இந்த நட­வ­டிக்­கை கள் நோக்­கப்­ப­டு­கின்­றன.

இந்த தடை­யா­னது பாட­சாலை மற்றும் நீதி­மன்றம் போன்ற இடங்­களில் அமுல்­ப­டுத்­தப்­ப­டும் எனத் தெரி­விக்­கப்­ப­டு­கின்­றது.

­அவுஸ்­­ரேலி­யாவி­லுள்ள, முகத்தை முழு­மை­யாக மறைக்கும் வகையில் ஆடை அணியும் சுமார் 150 பெண்­களை இத்­தடை பாதிக்­கலாம் என கணக்­கி­டப்­பட்­டுள்­ளது.

பல சீர்­தி­ருத்­தங்கள் அடங்­கிய தொகுப்­பினை அறி­வித்த ஆளுங்கூட்­டணி, கண்­களை மட்­டுமே வெளிக்­காட்டும் நிகாப் மற்றும் முகம் முழு­வ­தையும் மறைக்கும்  புர்கா போன்ற இஸ்­லா­மி­யரின் ஆடை­களைத் தடை செய்ய உத்­தே­சித்­துள்ள திட்டம் குறித்து இரண்டு வரி­களில் மட்­டுமே குறிப்­பிட்­டுள்­ளது.

இதனால் வளை­குடா நாடு­க­ளி­லி­ருந்து அவுஸ்­­ரேலி­யா­வுக்கு வரு­கின்ற சுற்­றுலாப் பய­ணிகள் பாதிக்­கப்­ப­டலாம் என நம்­பு­வ­தாக சுற்­று­லாத்­துறை அதி­கா­ரிகள் தெரி­வித்­துள்­ளனர்.

“நாங்கள் திறந்த தொடர்­பா­ட­லு­ட­னான திறந்த சமு­தாய முறை­மைக்கு உறு­தி பூண்டுள்ளோம்.  பொது இடங்­களில் முகத்தை முழு­மை­யாக மறைக்கும் ஆடை இதற்குக் குறுக்­கீ­டாக உள்­ளது.

எனவே, அதை நாம் தடை செய்­துள்ளோம் “என அவுஸ்­­ரேலி­ய அரசு தெரி­வித்­துள்­ளது.

ஐரோப்­பாவில், பிரான்ஸ் மற்றும் பெல்­ஜியம் ஆகி­ய­னவும் முகத்தை முழு­மை­யாக மறைக்கும் ஆடைக்கு  2011ஆம் ஆண்டு தடையை விதித்திருந்தன. சட்ட ரீதியாக சாத்தியமானால், ஜேர்மனியிலும் இத்தகைய ஆடையை அணிவது தடை செய்யப்பட வேண்டும் என ஜேர்மனிய சான்சலர் ஏஞ்சலா மேர்கெல் கடந்த மாதம் தெரி­வித்­தி­ருந்தார்.