ரோபோ தோல்

நுண்ணுணர்வு ரோபோகளை உருவாக்கும் தொடர் ஆராய்ச்சிகளின் அடுத்த கட்டமாக மனித தோல்களைப் போல் உணர்திறன் கொண்ட மேல்பாகத்தை உருவாக்க முனைந்துள்ளனர் ஆராய்சியாளர்கள்.

இதற்காக பாம்புகளின் மேல் தோலினைப்போல மிக மிருதுவான மின்னணு தோலினை உருவாக்கியுள்ளனர்.

இந்த தோல் பல விதமான அதிர்வுகளையும் உள்வாங்கும். ஒரு பொருளை தொடும்போது மனித தொடுதல் போலவே ரோபோவும் உணர்ந்து கொள்ள இந்த செயற்கை தோல் உதவும் என்றும் கூறியுள்ளனர்.