நம்பிக்கை அளிக்கும் உத்தரவாதத்தை அளியுங்கள்!

ஜல்லிக்கட்டு விவகாரம் சில இடங்களில் வன்முறை சம்பவமாக மாறியுள்ள நிலையில் இது தொடர்பாக நடிகர் சிம்பு ஒரு வீடியோவை வெளியிட்டிருக்கிறார். அதில் அவர் பேசியதாவது… ‛‛யார் சொன்னாலும் போராட்டாக்காரர்கள் கேட்டு கொள்ள வேண்டும் என்பது அவசியம் கிடையாது. இது அவர்கள் ஆரம்பித்து வைத்தது.

சிலர் வெற்றி கிடைத்துவிட்டது என்று சொன்னாலும், அதை நாம் அவர்களிடம் திணிக்க முடியாது. காவல்துறையும் அவர்களுக்கு கொஞ்சம் நேரம் கொடுத்திருக்கலாம். வன்முறையில் ஈடுபட மாணவர்களுக்கு அவசியமில்லை. இப்போது மாணவர்கள் எடுக்கும் முடிவுக்கு தான் அனைவருக்குமே கட்டுப்பட்டு ஒப்புக் கொள்ள வேண்டும்.

வன்முறையில் ஈடுபடுவதால் பெண்கள், குழந்தைகள் யாருக்குமே பாதிப்பு வந்துவிடக்கூடாது என்ற காரணத்தினாலே இப்போராட்டத்தை கைவிட வேண்டும்.

அரசாங்கமும் நமக்கு ஒத்துழைப்பு அளித்து ஒரு விஷயத்தை செய்துள்ளார்கள். இந்நேரத்தில் நரேந்திர மோடிக்கு ஒரு பணிவான வேண்டுகோள். உடனடியாக மக்களுக்கு நம்பிக்கையையும், உத்தரவாதத்தையும் தரும் ஒரு அறிக்கையை வெளியிட்டு, தமிழகத்தில் நடக்கும் இந்த சூழலை நிறுத்துங்கள். உங்களை நாங்கள் நம்புகிறோம்.

மாணவர்களுக்கு நம்பிக்கை அளிக்கும் வகையில் ஏதாவது ஒரு விஷயம் நடந்தால் மட்டுமே உடனே கலைந்து சொல்வார்கள். வேறு எப்படியும் இதை நிறுத்த முடியாது என்பது என் தனிப்பட்ட கருத்து இவ்வாறு சிம்பு கூறியுள்ளார்.