அவுஸ்திரேலியாவில் ஆப்கான் அகதி ஒருவர் பெண்ணை கத்தியால் குத்தினார்!

அவுஸ்திரேலியாவில் ஆப்கான் அகதி ஒருவர் கிறிஸ்துவ பெண்ணை மார்பில் கத்தியால் குத்திய சம்பவம் பரபரப்பை ஏறப்படுத்தியுள்ளது.

Voecklamarkt, Timelkam உள்ள அகதிகள் விடுதியிலே இந்த தாக்குதல் சம்பவம் நடந்துள்ளது. குற்றச்செயல்லில் ஈடுபட்ட 22 வயதான ஆப்கான் அகதியை பொலிசார் கைது செய்துள்ளனர்.

பாதிக்கப்பட்ட 50 வயதான பெண்ணை கிறிஸ்துவ குடியிருப்பாளர்கள் அகதி விடுதியில் பைபிள் படிக்க அழைத்துள்ளனர்.

சமையலறையில் பெண் பைபிள் வாசித்துக்கொண்டிருந்தை அறிந்த அகதி, சமையலறையில் நுழைந்து கத்தியால் பெண்ணின் மார்பு பகுதியில் குத்தியுள்ளார்.

பெண் அணிதிருந்த குளிர்கால கோட் தடித்து இருந்ததால் அதிர்ஷ்டவசமாக அவர் பெரிய காயத்திலிருந்து தப்பித்துள்ளார். எனினும், தடுமாறி கீழே விழுந்ததில் காது பகுதியில் காயம் ஏற்பட்டுள்ளது.

பொலிசார் நடத்திய விசாரணையில் குற்றத்தை ஒப்புக்கொண்ட அகதி, தான் தனிப்பட்ட பிரச்சினைகளால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். கைது செய்யப்பட்டுள்ள குற்றவாளி தொடர்ந்து சிறை காவலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.