நான் செவ்வாய்கிரக வாசி!- அவுஸ்ரேலியப் பெண்..!

அவுஸ்திரேலிய நாட்டின் மெல்பேர்ன் நகரில் வசித்து வரும் Lea Kapiteli என்ற யுவதி தான் மனித இனத்தை சேர்ந்தவர் அல்ல எனக் கூறி அனைவரையும் பிரம்மிப்பில் ஆழ்த்தியுள்ளார். 22 வயதான இந்த யுவதி தான் செவ்வாய் கிரகவாசிகளின் மரபணுவை கொண்ட கலப்பினம் என தெரிவித்துள்ளார்.

தனது பிறப்பு பற்றி கருத்து வெளியிட்டுள்ள யுவதி, தனது தாய் உறக்கத்தில் இருந்த போது, செவ்வாய் கிரகவாசிகள் தன்னை பெற்றெடுக்க தேவையான அடிப்படை மரபணுவை தனது தாயின் வயிற்றில் வைத்ததாகவும், செவ்வாய் கிரகத்தில் மட்டுமல்லாது அண்டவெளியில் உயிர்கள் இருப்பதாகவும் அவர்கள் பூமியில் உள்ள மனிதர்களுடன் இணைந்து கலப்பினங்களை உருவாக்கி வருவதாகவும் யுவதி தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில், தமது மகள் சிறிய வயதில் இருந்து வித்தியாசமானவராக இருந்தார் என்றும், தனக்கு இணையான வயதுடைய நண்பர்களுடன் பழகுவதை தவிர்த்து வந்ததாகவும் இந்த பெண்ணின் பெற்றோர்கள் தெரிவித்துள்ளனர்.

எவ்வாறாயினும் தன்னை செவ்வாய் கிரக பெண் எனக் கூறும் இந்த யுவதி செவ்வாயில் வாழும் உயிரினத்தின் படங்களை வரைந்துள்ளார். இதேவேளை ஓவியங்களை வரைந்தால், அவர் ஓவியம் வரைய கற்றுக்கொண்டவர் அல்ல என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் அண்டவெளியில் இருக்கும் தனக்கு பிடித்த இடங்களும் தான் இவ்வாறு சென்று வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

விஞ்ஞானிகள் பல ஆண்டுகளாக ஆய்வு செய்து கண்டுபிடித்த வேறு கிரகங்கள் பற்றி இந்த யுவதி சிறிது நேர உறக்கத்தின் பின் தெளிவாக விபரிப்பது வியப்பை ஏற்படுத்தியுள்ளது.

யுவதியின் அசாதாரண நிலையினால் மருத்துவ பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்பட்ட போது, அவரது உடல் நிலையில் எந்த பாதிப்பும் இல்லை என பரிசோதனைகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் யுவதியின் அதி சக்தி வாய்ந்த மனநிலை தொடர்பிலும் பரிசோதனையாளர்கள் ஆச்சரியமடைந்துள்ளனர்.