அவுஸ்ரேலியாவில் கிருஸ்தவ கட்டத்தில் எரிவாயு சிற்றூர்த்தி மோதியது

அவுஸ்ரேலியாவின் தலைநர் கன்பராவில் கிருஸ்தவ லொபி கட்டிடத்தில் எரிவாயு கொள்கலன்களை ஏற்றிச் சென்ற சிற்றூர்த்தி ஒன்று கட்டிடத்தில் மோதியத்தில் கட்டிடத் சேதமடைந்தவுடன் சிற்றூர்தி முற்றாக எரிந்துள்ளது. இச்சம்பவம் நேற்று(21)  புதன்கிழமை இரவு இடம்பெற்றுள்ளது.

சிற்றூர்த்தி ஓட்டுநர் பலத்த எரிகாயங்களுடன் கன்பரா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.  முதலில் இது ஒரு தீவிரவாத தாக்குதலாக இருக்கும் என சந்தேகித்த காவல்துறையினர் பின் ஓட்டுநரிடம் விசாரணைகளை நடத்திய பின் இது தீவிரவாத தாக்குதல் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.