ஜெயலலிதா மறைவு! அவுஸ்ரேலிய தமிழர்கள் இரங்கல்

கடந்த 5ம் தேதி உடல் நலக்குறைவு காரணமாக சென்னை அப்போலோ மருத்துவமனையில் ஜெயலலிதா மறைந்தார். அவரது உடல் எம்ஜிஆர் நினைவிடத்தின் அருகில் 6ம் தேதி நல்லடக்கம் செய்யப்பட்டது.

உலக நாடுகளில் வாழும் தமிழர்களும் ஜெயலலிதாவின் மறைவிற்கு அஞ்சலி செலுத்தினார்கள்.அதன் வகையில்

அவுஸ்ரேலியாவின் சிட்னி நகரில் உள்ள இந்திய கல்சுரல் சென்டரில் ஜெயலலிதா மறைவுக்கு 07 ஆம் திகதி மாலை இரங்கல் கூட்டம் நடத்தப்பட்டது.

கூட்டத்தில் ஜெயலலிதாவின் நினைவுகள் குறித்து பலரும் பேசினார்கள். ஜெயலலிதாவின் இழப்பு உலகம் முழுவதும் வசிக்கும் தமிழர்களுக்கு பேரிழப்பு என்று நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் கூறினார்கள்.

08-1481174761-jayalalitha99