சிட்னி விமான நிலையத்தில் பணிபுரியும் இலங்கையர் மீது பாலியல் குற்றச்சாட்டு!

சிட்னி விமான நிலையத்தில் சுங்கப் பணியாளராக பணிபுரிந்த இலங்கையின் முன்னாள் கிரிக்கெட் வீரர் ஒருவர் பாலியல் குற்றச்சாட்டில் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டுள்ளார்.

ஆன்டனி அப்பாத்துரை ஒரு பாரிஸ்டாவைக் காதலிப்பதாகக் கூறி, அவளது ஆடைகளைப் பிடித்து இழுத்து, முத்தமிட முயன்றதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

73 வயதான குற்றவாளி, ஆகஸ்டில் பாதிக்கப்பட்ட பெண்ணிடம் இவ்வாறான முறைகேடான நடத்தையில் ஈடுபட்டமைக்காக 2022 டிசம்பர் 2022 வரை சமூக சீர்திருத்த நடவடிக்கைகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக அவுஸ்திரேலிய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.