அவுஸ்திரேலியா – தென் கொரியா இடைய 717 மில்லியன் டொலர் பெறுமதியான பாதுகாப்பு ஒப்பந்தம்

அவுஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மோரிசன் மற்றும் தென் கொரிய ஜனாதிபதி மூன் ஜே இன் ஆகியோர் 717 மில்லியன் அமெரிக்க டொலர் பாதுகாப்பு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளனர்.

சுமார் 1 பில்லியன் அவுஸ்திரேலிய டொலர்கள் பெறுமதியான இந்த ஒப்பந்தம் திங்களன்று கான்பெர்ராவிற்கான மூனின் நான்கு நாள் பயணத்தின் போது கைச்சாத்திடப்பட்டது.

கொவிட் தொற்றுநோய் தொடங்கிய பின்னர் அவுஸ்திரேலியாவுக்குச் செல்லும் முதல் வெளிநாட்டுத் தலைவர் தென் கொரிய ஜனாதிபதி ஆவார்.

புதிய பாதுகாப்பு ஒப்பந்தம் தென் கொரிய பாதுகாப்பு நிறுவனமான ‘Hanwha’ அவுஸ்திரேலியா இராணுவத்திற்கு பீரங்கி ஆயுதங்கள், விநியோக வாகனங்கள் மற்றும் ரேடார்களை வழங்கும்.

இது அவுஸ்திரேலியாவுக்கும் ஆசிய நாட்டிற்கும் இடையே செய்யப்பட்ட மிகப்பெரிய பாதுகாப்பு ஒப்பந்தமாகும்.
மேலும் இது அவுஸ்திரேலியாவிற்கும் சீனாவிற்கும் இடையே பதற்றங்கள் அதிகரித்துள்ள நிலையில் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அமெரிக்கா மற்றும் ஐக்கிய இராச்சியத்துடன் இணைந்து அணுசக்தியால் இயங்கும் நீர்மூழ்கிக் கப்பல்களை உருவாக்குவதற்கான ஒப்பந்தத்தை அவுஸ்திரேலியா அண்மையில் அறிவித்தது, இது AUKUS என அழைக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.