ஆஸ்திரேலியா – சிங்கப்பூர் இடையே மேற்கொள்ளப்பட்ட பயண ஏற்பாட்டின்கீழ் சிங்கப்பூரிலிருந்து, இன்று முதல், முழுமையாகத் தடுப்பூசி போட்டுக்கொண்ட பயணிகள் ஆஸ்திரேலியா(விக்டோரியா மற்றும் நியூ சவுத் வேல்ஸ்) வரலாம். அவர்கள் தங்களைத் தனிமைப்படுத்திக்கொள்ளத் தேவையில்லை.
ஆனால் ஆஸ்திரேலியா வருவதற்கு முன்னர், சிங்கப்பூர் பயணிகள் கோவிட் சோதனையை மேற்கொண்டு தமக்கு தொற்று இல்லையென்பதை நிரூபிக்க வேண்டும்.
இதனடிப்படையில் சிங்கப்பூரிலிருந்து பயணிகளை ஏற்றிக்கொண்டு வந்த விமானங்கள், சிட்னி மற்றும் மெல்பனில் இன்று தரையிறங்கியுள்ளன.
Eelamurasu Australia Online News Portal