7 மணிநேரம் வாக்குமூலம் வழங்கினார் அருட்தந்தை சிறில்

அரச புலனாய்வுப் பிரிவின் பணிப்பாளர் சுரேஷ் சலே வழங்கிய முறைப்பாடு தொடர்பில், அருட்தந்தை சிறில் காமினி, 7 மணித்தியாலங்களுக்கு அதிகமான நேரம் வாக்குமூலம் வழங்கியதாக குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் விசேட புலனாய்வுப் பிரிவு 1 இன் பொறுப்பதிகாரியின் அறிவுறுத்தலின் பேரில் இன்று (15) காலை 10 மணியளவில் சிறில் காமினி வருகை தந்ததாக அவர் மேலும் தெரிவித்தார்.

அதன்படி 07 மணித்தியாலங்களுக்கு மேலாக வாக்குமூலம் வழங்கிய அருட்தந்தையால், நாளை (16) மீண்டும் வாக்குமூலம் வழங்கப்படவுள்ளதாக குறிப்பிட்டார்.

இதற்கு முன்னர் இரண்டு தடவைகள், குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினர், விசாரணைக்கு அழைத்த போதிலும், அவர் ஆஜராகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.