வட மாகாண முன்னாள் ஆளுநர் தேர்தல் ஆணைக்குழுவுக்கு?

இரண்டு ஆணைக்குழுக்களின் வெற்றிடங்களை நிரப்புவதற்காக புதிய உறுப்பினர்களை நியமிக்க பாராளுமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

இதன்படி பொதுச் சேவைகள் ஆணைக்குழு மற்றும் தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு புதிய உறுப்பினர்களை நியமிப்பதற்கான அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளதாக பாராளுமன்ற தொடர்பாடல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

சுந்தரம் அருமைநாயகம் பொதுச்சேவைகள் ஆணைக்குழுவுக்கும் வடமாகாண முன்னாள் ஆளுநர் பி.எஸ்.எம்.சாள்ஸின் பெயர் தேர்தல் ஆணைக்குழுவுக்கும் ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ஷவினால் முன்மொழியப்பட்டுள்ளதாகத் தெரியவருகிறது.