யாழ்ப்பாணத்தின் மரபுரிமைச் சின்னமான சிறாப்பர் மடம் இன்று திறப்பு விழா

யாழ்ப்பாணத்தின் முக்கிய மரபுரிமைச் சின்னங்களில் ஒன் றான கீரிமலை நகுலேஸ்வர சுவாமிகள் தண்ணீர் பந்தல் (சிறாப்பர் மடம்) சீரமைக்கப் பட்டு இன்று திறந்து வைக்கப் படவுள்ளது.

தொல்லியல் திணைக்களத்தால் சுப்பிரமணியர் கதிரவேலு (சிறாப்பர்) குடும்பத்தின் நேரடி வாரிசுகளும் இணைந்து இந்தத் தண்ணீர்ப்பந்தல் பழைமை மாறாமல் சீரமைப்புச் செய்யப்பட்டது.

அதன் பழைமைவாய்ந்த பிள்ளையார் சிலை இன்று புதன்கிழமை முற்பகல் 9.30 மணிக்கு ஆகம முறைப்படி வைக்கப்பட்டது.