நமீதா மாரிமுத்து, பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய பின், தற்போது முதன்முறையாக தனது சமூக வலைதள பக்கத்தில் வீடியோ ஒன்றை பதிவிட்டு உள்ளார்.
பிக்பாஸ் நிகழ்ச்சி தமிழில் இதுவரை 4 சீசன்கள் முடிவடைந்துள்ளது. தற்போது 5-வது சீசன் நடைபெற்று வருகிறது. கடந்த அக்டோபர் 3-ந் தேதி தொடங்கப்பட்ட இந்நிகழ்ச்சியில், 18 போட்டியாளர்கள் கலந்துகொண்டனர். அதில் நமீதா மாரிமுத்து என்கிற திருநங்கையும் ஒருவர். தமிழ் பிக்பாஸ் வரலாற்றில் திருநங்கை ஒருவர் போட்டியாளராக கலந்துகொண்டது இதுவே முதன்முறை.
இந்நிகழ்ச்சியில் நமீதா மாரிமுத்து, தான் கடந்து வந்த கஷ்டங்கள் குறித்து பேசியது காண்போரை கண்கலங்க வைத்தது. இதன்மூலம் ரசிகர்கள் மனதில் இடம்பிடித்த நமீதா, அந்நிகழ்ச்சியில் இறுதி வரை செல்வார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், மருத்துவ காரணங்களுக்காக ஒரே வாரத்தில் வெளியேறினார்.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய பின், தற்போது முதன்முறையாக தனது சமூக வலைதள பக்கத்தில் வீடியோ ஒன்றை பதிவிட்டு உள்ளார். அந்த வீடியோவில், அவர் ஏழை மக்களுக்கு இலவசமாக உணவு வழங்குவது போன்ற காட்சிகள் இடம்பெற்றுள்ளன. நமீதா மாரிமுத்துவின் இந்த செயலுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.
Eelamurasu Australia Online News Portal