வாகன இறக்குமதி மீதான தடையை நீக்க எத்தகைய தீர்மானமும் மேற்கொள்ளவில்லை

வாகன இறக்குமதியை மீண்டும் ஆரம்பிப்பதற்கான கொள்கை முடிவை அரசாங்கம் எடுக்கவில்லை என அமைச்சரவை பேச்சாளரான டலஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார்.

இன்று இடம்பெற்ற வாராந்த அமைச்சரவை ஊடக சந்திப்பின் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
தற்போதுள்ள தடையை திரும்பப் பெற எந்த முடிவும் எடுக்கப்படவில்லை.

எவ்வாறாயினும், தற்போதுள்ள இறக்குமதி தடையை எதிர்காலத்தில் தளர்த்தப்பட வாய்ப்பு உள்ளதாக மத்திய வங்கி ஆளுநர் அண்மையில் ஊடகங்களுக்கு சுட்டிக்காட்டியதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.