காணாமலாக்கப்பட்ட மகனைத் தேடிய தந்தை உயிரிழப்பு!

வவுனியா, மதியாமடு, புளியங்குளத்தைச் சேர்ந்த செபமாலை இராசதுரை என்பவரே இவ்வாறு உயிரிழந்தவராவார்.

2009ஆம் ஆண்டு இறுதிப் போர் முடிவடைந்தபோது – 2009. 05. 24 அன்று ஓமந்தை சோதனைச் சாவடியில் வைத்து இராணுவத்தினர் உயிரிழந்தவரின் மகனான இராசதுரை விஜி (வயது 22) என்பவ ரைக் கைது செய்தனர்.

இதன் பின்னர், அவர் குறித்த எந்தத் தகவலும் தெரிய வரவில்லை. தனது மகனைத் தேடியும் நீதி கோரியும் போராட்டங்கள் பலவற் றில் அவர் பங்கேற்று வந்திருந்தார்.

வவுனியாவில் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளால் 1,668 நாட்க ளைக் கடந்து நடத்தப்படும் போராட்டத்திலும் அவர் பங்கேற்று வந்திருந்தார். இந்த நிலையில், தனது மகன் குறித்து எந்தத் தகவலும் தெரியாத நிலையிலேயே அவர் உயிரிழந்தார்.