மற்றுமொரு வைத்தியரும் விலகினார்!

சுகாதார அமைச்சின் கொவிட் தொற்றொழிப்பு தொழில்நுட்ப குழுவிலிருந்து மயக்க மருந்து நிபுணர் டாக்டர் அசோக குணரத்ன இராஜினாமா செய்துள்ளார்.

இந்தக் குழுவில் தொடர்ந்தும் அங்கம் வகிப்பதில் எவ்விதமான பிரயோசமும் இல்லை என்பதால், அக்குழுவிலிருந்து இராஜினாமா செய்வதாக மயக்க மருந்து நிபுணர் டாக்டர் அசோக குணரத்ன தெரிவித்துள்ளார்.

முன்னதாக,   பேராசிரியர் நீலிகா மாலவிகே மற்றும் டாக்டர் ஆனந்த விஜேவிக்ரம ஆகியோரும் தொழில்நுட்பக் குழுவில் இருந்து விலகினர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.