தமிழ் அகதி தம்பதிக்கு திருமண நாள் வாழ்த்து

ஆஸ்திரேலியா: தமிழ் அகதி தம்பதிக்கு வாழ்த்து தெரிவித்துள்ள அக்குடும்பத்தின் ஆஸ்திரேலிய ஆதரவாளர்கள்
ஆஸ்திரேலியாவில் நாடுகடத்தல் அச்சுறுத்தலை எதிர்கொண்டுள்ள தமிழ் அகதிகளான பிரியா- நடேசலிங்கம் மற்றும் அவர்களது இரு குழந்தைகளுக்கு ஆதரவாக செயல்பட்டு வரும் Bring Priya, Nades and their girls home to Biloela எனும் சமூகக்குழு ‘பிரியா- நடேசலிங்கம்’ தம்பதியினரின் 8வது திருமண நாளுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளது.
‘இத்தமிழ் அகதி குடும்பம் அச்சுறுத்தல் மிகுந்த இலங்கைக்கு நாடுகடத்தப்படக்கூடாது, அவர்கள் ஆஸ்திரேலியாவிலேயே நிரந்தரமாக வாழ அனுமதிக்கப்பட வேண்டும்’ என்பது அக்குழுவின் கோரிக்கையாக உள்ளது. இதற்காக பிரியா- நடேசலிங்கம் குடும்பத்திற்கு ஆதரவாக பல்வேறு போராட்டங்களை, முயற்சிகளை Biloela குழு மேற்கொண்டு வருகிறது.