நியூசிலாந்தில் சுட்டுக்கொல்லப்பட்ட காத்தான்குடி ஆதில்

நியூசிலாந்தில் ஓக்லாந்திலுள்ள விற்பனை நிலையமொன்றில் மக்கள் மீது தாக்குதல் நடாத்திய நிலையில் காவல் துறையால்   சுட்டுக்கொல்லப்பட்டவர் இலங்கை காத்தான்குடியைச் சேர்ந்த 31 வயதுடைய முஹமது சம்சூதீன் ஆதில் என அரச புனலாய்வு துறையினரால் அடையாளம் காணப்பட்டுள்ளது.

அவர் தொடர்பான விசாரனைகளை மேற்கொண்டுவருவதாக காவல் துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

இவ்வாறு சுட்டுக்கொல்லப்பட்டவர் இலங்கை சேர்ந்தவர் எனவும் ஐ.எஸ்.ஐ.எஸ் பயங்கரவாதிகளுடன் தொடர்புபட்டவர் என நியூசிலாந்து நாட்டு பிரதமர் அறிவித்திருந்தார்.

இந்நிலையில் இவர் தொடர்பாக இலங்கை குற்ற புலனாய்வு பிரிவினர் மற்றும் அரச புலனாய்வு பிரிவினர் மேற்கொண்ட விசாரனையில் இவர் காத்தான்குடியைச் சேர்ந்தவர் என அடையாளம் காணப்பட்டார்.

காத்தான்குடி கபூர் கடை வீதியைச் சேர்ந்த அதிபரான சம்சூதீன் முஹமது இஸ்மாயில் சரிதா தம்பதிகளுக்கு 1989ஆம் ஆண்டு  கடைசி மகனான முஹகமது சம்சூதீன் ஆதில் பிறந்துள்ளார்.

அவருக்கு ஒரு சகோதரியும் 2 சகோதர்கள் உள்ளனர்.  4 பேரை கொண்ட குடும்பத்தைச் சேர்ந்த ஆதில்  ஆரம்பகட கல்வியை மட்டக்களப்பு மெதடிஸ்த மத்திய கல்லூரியில் பயின்று வந்துள்ள நிலையில் நாட்டில் ஏற்பட்ட யுத்த காரணமாக குடும்பத்துடன் 1998 ஆம் ஆண்டு ஆதிலுக்கு 8 வயதில் இருக்கும் போது இடம்பெயர்ந்து கொழும்பு மொரட்டுவையில் தங்கியிருந்து வாழ்ந்து வந்துள்ளனர்.

இந்த நிலையில் கொழும்பு பம்பலப்பிட்டி இந்துக் கல்லூரியில் க.பொ. உயர்தரம்  கல்வி கற்று 2006 ஆம் ஆண்டு பரீட்சை எழுதிய பின்னர் 2011 ஆம் ஆண்டு நியூசிலாந்திற்கு சென்று குடியேறியுள்ளான்.

இவரின் தந்தையார் மாளிகாவத்தை அல் ஹிதாய பாடசாலையில் 2008 ஓய்வு பெறும் வரை அந்த பாடசாலை அதிபராக கடமையற்றி வந்து நிலையில் அவரது மகள் கனடாவில் குடியேறி வாழ்ந்துவருகிறார். அவருடன் கனடாவிற்கு சென்று தந்தையார் குடியேறி வாழந்துவருகின்றார்.

அதேவேளை ஒரு சகோதரன்; கட்டாரில் திருமணம் முடித்து வாழ்ந்துவருகின்றார்.   அடுத்த சகோதரன் சவூதியில்  இருப்பதாகவும் கொலன்னாவையில் உள்ள   சொந்த வீட்டை வாடகைக்கு கொடுத்துள்ள தாயார்., காத்தான்குடி கபூர் கடை வீதியிலுள்ள தனது வீட்டில் தாயார் வசித்துவருகின்றார்

இந்த நிலையில்     குடும்பத்தில் கடைசிப் பிள்ளையான முஹமது சம்சூதீன் ஆரிப் நியூசிலாந்தில் குடியேறிய பின்னர் அவர் அங்கு பல்வேறு குற்றச் செயல்காரணமாக பொலிஸபரால் கைது செய்யப்பட்டு விடுவிக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில் அவர் ஜ.எஸ்.ஜ.எஸ். பயங்கரவாதிகளுடன் தொடர்பை ஏற்படுத்தி வந்துள்ளதை நியூசிலாந்து காவல் துறை கண்டுபிடித்து அவரை பின் தொடர்ந்துள்ளனர். இந் நிலையிலேயே அந்நாட்டு காவல் துறையால் ஆதில் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.

ஆதில், அவருடைய குடும்ப உறுப்பினர்கள் உள்ளிட்டவர்கள் தொடர்பில்,  அரச புலனாய்வு பிரிவினர் மற்றும் காத்தான்குடி காவல் துறை விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர் என அந்த காவல் துறை அதிகாரி தெரிவித்தார்.