எதிர்பார்த்ததற்கு முன்னரே இலக்கை அடைந்த விக்டோரியா

விக்டோரியா மாநிலத்தில் சமூகப் பரவல் மூலம், புதிதாக 190 பேருக்குத் தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது. தொற்று கண்டவர்களில் 103 பேருக்கு எங்கிருந்து தொற்று ஏற்பட்டது என்பது தெரியும்.

விக்டோரிய மாநிலத்தில் தடுப்பூசி போட்டுக் கொண்டவர்கள் எண்ணிக்கை விரைவில் 70 சதவீதமாகும். எதிர்பார்த்ததை விட இந்த இலக்கு முன்னதாகவே எட்டப்படுகிறது. இருந்தாலும், வணிக நிறுவனங்களுக்கு ஆதரவுத் தொகை வழங்கப்படும் காலம் நீட்டிக்கப்படுகிறது என்று Jobs Minister Martin Pakula கூறினார்..