நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தில் திருமணங்கள் மீதான கட்டுப்பாடுகள் தளர்கின்றன!

New South Wales மாநிலத்தில் சமூகப் பரவல் மூலம், புதிதாக 1035 பேருக்குத் தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது. தொற்றுள்ளவர்களில் 714 பேர் சிட்னியின் மேற்கு மற்றும் தென்மேற்கு சிட்னியில் வசிப்பவர்கள். தொற்றினால் இருவர் இறந்துள்ளார்கள், ஒருவர் 70 வயதுகளில் மற்றவர் 80 வயதுகளில்.

தொற்று அதிகமாகப் பரவியுள்ள இடங்களில் தடுப்பூசி பெற முன்னுரிமை வழங்கப்பட்டவர்கள் வயது வரம்பு அதிகரிக்கப் பட்டுள்ளது. இதனால், 40 முதல் 49 வயதுடையவர்கள் விரைவில் தடுப்பூசி முடியும். மளிகை மற்றும் இறைச்சி விநியோகத்தில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்கள், தொற்று அதிகமாகப் பரவியுள்ள இடங்களில் வசிக்காவிட்டாலும் தடுப்பூசி பெற முன்னுரிமை வழங்கப்பட்டுள்ளது.

திருமணங்கள் மீதான கட்டுப்பாடுகளை தளர்த்தப்படுகின்றன – செப்டம்பர் 3ஆம் தேதி முதல் ஐந்து விருந்தினர்கள் கலந்து கொள்ள அனுமதி வழங்கப்படுகிறது.

தொற்று அதிகமாகப் பரவியுள்ள 12 உள்ளூராட்சிப் பகுதிகளுக்கு அங்கீகரிக்கப்பட்ட தொழிலாளர்கள் சென்று வருவதற்கு அனுமதி பெற விண்ணப்பிக்க வேண்டும்.