வெளிநாடுகளில் வாழும் இலங்கையர்கள் உதவவேண்டும்- சுதர்சிணி பெர்ணான்டோபுள்ளே

இலங்கை கொரோனா வைரசிற்கு எதிராக மேற்கொண்டுள்ள போராட்டத்திற்கு வெளிநாடுகளில் வாழும் இலங்கையர்கள் உதவவேண்டும் என மீண்டும் இராஜாங்க அமைச்சர் சுதர்சினி பெர்ணான்டோபுள்ளே வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இலங்கையின் தேசிய கிறிஸ்தவ கூட்டமைப்பு மருத்துவமனைகளிற்கு அவசியமான மருத்துவ உபகரணங்களை அமைச்சரிடம் கையளித்தவேளை அமைச்சர் இந்த வேண்டுகோளை விடுத்துள்ளார்.

கொவிட் நோயினால் பாதிக்கப்பட்ட நிலையில் சுவாசப்பிரச்சினையால் பாதிக்கப்பட்டுள்ளவர்களிற்கு கிசிச்சை வழங்குவதற்கான மருத்துவ உபகரணங்களை இலங்கையின் தேசிய கிறிஸ்தவ கூட்டமைப்பு வழங்கியுள்ளது.
இந்த மருத்துவ உபகரணங்களை வழங்கியவர்கள் அவற்றை வடக்குகிழக்கு மருத்துவமனைகளிற்கு வழங்குமாறு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

இதன்போது கருத்து தெரிவித்த அமைச்சர் கொவிட்வைரசினால் நாட்டின் சுகாதார துறை கடும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள இந்த தருணத்தில் இந்த உபகரணங்கள் மக்களின் உயிர்களை பாதுகாப்பதற்கு உதவியாக அமையும் என தெரிவித்தார்.

நாட்டின் மக்களை காப்பாற்றுவதற்காக இலங்கையிலும் வெளிநாட்டிலும் வாழ்பவர்கள் உதவவேண்டும் என அமைச்சர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

தனது வேண்டுகோளை ஏற்று பலர் மருத்துவமனைக்கு உதவமுன்வந்துள்ளனர் என அவர் குறிப்பிட்டுள்ளார்.