ரிஷாட்டின் மைத்துனருக்கு பிணை

முன்னாள் அமைச்சரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீனின் மனைவியின் சகோதரர், பிணையில் விடுதலைச் செய்யப்பட்டுள்ளார்.

ரிஷாட்டின் வீட்டில் பணிப்பெண்ணாக பணியாற்றிய யுவதியை 2016ஆம் ஆண்டு பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்திய குற்றச்சாட்டின் ​பேரிலேயே அவர் கைது செய்யப்பட்டு, விளக்கமறியலில் வைக்கப்பட்டார்.

அந்த வீட்டில் பணியாற்றிய டயகமவைச் சேர்ந்த 16 வயதான சிறுமியின் மரணத்தை அடுத்து மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளிலேயே, அவ்வீட்டில் பணியாற்றிய மற்றுமொரு யுவதியும் பாலியல் துஷ்பிர​யோகத்துக்கு உட்படுத்தப்பட்டுள்ளமை தெரியவந்தது. அதனையடுத்தே ரிஷாட்டின் மைத்துனர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தார்.