அபிவிருத்தி அதிகாரிகளை ஆசிரியர் சேவையில் உள்வாங்குமாறு கோரிக்கை

பாடசாலைகளில் நிலவும் வெற்றிடங்களை நிரப்ப வேலையில்லா பட்டதாரிகள் மற்றும் அபிவிருத்தி அதிகாரிகளை உள்வாங்குமாறு அபிவிருத்தி அதிகாரிகள் சேவை சங்கம் கல்வி அமைச்சரிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

எழுத்துப்பூர்வமாக இக்கோரிக்கையானது முன்வைக்கப்பட்டுள்ளது.

தற்போது சுமார் 60,000 ஆசிரியர் வெற்றிடங்கள் உள்ளன, எனவே வேலையில்லா பட்டதாரிகள் மற்றும் அபிவிருத்தி அதிகாரிகளுடன் ஆட்சேர்ப்பு செயல்முறையை முடிக்குமாறு இது தொடர்பான அமைச்சரிடம் கோரிக்கை விடுத்துள்ளன.