யாழில் பிறந்து ஒரு நாளேயான குழந்தைக்கு கொரோனா தொற்று உறுதி!

யாழ். போதனா வைத்தியசாலையில் பிறந்து ஒரு நாளேயான குழந்தைக்கு கொரோனா தொற்று உள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

குறித்த குழந்தை நேற்று முன்தினம் பிறந்துள்ள நிலையில் அதற்கு பி.சி.ஆர் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.

பி.சி.ஆர் பரிசோதனையின் முடிவுகளின்படி குழந்தைக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.