முன்னாள் அமைச்சர் மங்கள சமரவீரற்கு ஐக்கிய மக்கள் சக்தியுடன் மீண்டும் இணைவதற்கு அழைப்புவிடுக்கப்பட்டு இருந்த நிலையில், ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன என்பன ஒரு நாணயத்தின் இரு பக்கங்கள் என அதனை மறுத்துள்ளார்.
சமரவீர மீண்டும் கட்சியில் இணைய ஆர்வமாக இருந்தால், கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுடன் இந்த விடயம் தொடர்பில் கலந்துரையாடுவதாக ஐக்கிய மக்கள் சக்தி செயற்குழு உறுப்பினர் ரெஹான் ஜெயவிக்ரம நேற்று தெரிவித்திருந்தார்.
இது தொடர்பில் தனது பேஸ்புக் பக்கத்தில் மங்கள சமரவீர தனது கருத்துக்களை தெரிவித்துள்ளார்.
ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன என்பன ஒரே நாணயத்தின் இரண்டு பக்கங்களாகும். நமது நாடு அதன் கொள்கை திசையில் மொத்தமாக திரும்புவதற்கு தீவிரமாக முயல்கிறது. நன்றி, ரெஹான் ஆனால் உங்கள் அன்பான அழைப்பிற்கு நான் வருத்தப்பட வேண்டும்; உங்கள் தலைவருக்கு அன்பான அன்புடன், என சமரவீர மேலும் தெரிவித்துள்ளார்.
Eelamurasu Australia Online News Portal