யாழ்.மாவட்டத்தில் 55 பேர் உட்பட வடக்கில் 68 பேருக்கு கொவிட் தொற்று

யாழ்.மாவட்டத்தில் 55 பேர் உட்பட வடக்கு மாகாணத்தில் 68 பேருக்கு கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

யாழ்.பல்கலைக்கழக ஆய்வுகூடத்தில் நேற்று 436 பேருக்கு மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனையில் குறித்த தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

அதன் அடிப்படையில் யாழ். மாவட்டத்தில் 55 பேருக்குத் தொற்று,கரவெட்டி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 13 பேர், காரைநகர் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 12 பேர், யாழ்.போதனா வைத்தியசாலையில் 08 பேர், சண்டிலிப்பாய் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 04 பேர், வேலணை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 03 பேர், நல்லூர் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 03 பேர், பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் 03 பேர்,

தெல்லிப்பழை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 02 பேர், சங்கானை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 03 பேர், சாவகச்சேரி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் ஒருவர், உடுவில் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் ஒருவர், பண்டத்தரிப்பு பிரதேச வைத்தியசாலையில் ஒருவர், கோப்பாய் பிரதேச வைத்தியசாலையில் ஒருவர், வவுனியா வடக்கில் 10 பேர், மன்னார் மாவட்ட வைத்தியசாலையில் ஒருவர் ஆகியோருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதேவேளை, அக்கராயன்குளம் தனிமைப்படுத்தல் நிலையத்தில் 02 பேருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.